சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை கடையில் புகுந்து தாக்கிய ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவரின் மகன்..!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகேயுள்ள கொளப்பாக்கத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை, ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் கடையில் புகுந்து தாக்கியதாக சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்மார்க்கெட் நடத்தி வரும் ஜெயக்குமார், கடந்த உள்ளாட்சி தேர்தலில் போது ஊனமாஞ்சேரி ஊராட்சியில் போட்டியிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரனுடன் அடிக்கடி மோதல் போக்கு இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் மகேந்திரன் மகன் சந்தோஷ் தாக்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.