Ponniyin Selvan 2: இருந்த ஒரு குறையும் தீர்ந்துடுச்சு: பொன்னியின் செல்வன் 2 ரசிகர்கள் செம ஹேப்பி

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Ponniyin Selvan 2 release: பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகள் தொடர்பாக ரசிகர்களுக்கு இருந்த ஒரேயொரு குறை தீர்ந்துவிட்டது.

​பொன்னியின் செல்வன் 2​மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தை பல்வேறு நகரங்களில் பிரமாண்டமாக விளம்பரம் செய்து வருகிறார்கள். விளம்பர நிகழ்ச்சிகளில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் த்ரிஷா.

​Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் ஏன் இவ்ளோ பெரிய ஹிட்டாச்சு?: கார்த்தி சொன்ன ரகசியம்

​கோரிக்கை​Trisha:பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2க்கு த்ரிஷாவுக்கு இவ்ளோ தான் சம்பளமா?விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தான் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயை கண்ணில் காட்டவே மாட்டீர்களா?. தயவு செய்து அவரை விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வாருங்கள் என ரசகிர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அவர்களின் கோரிக்கை நிறைவேறிவிட்டது.

​ஐஸ்வர்யா ராய்​ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடந்த பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார். அவருடன் மகள் ஆராத்யாவும் வந்திருந்தார். ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகாக வந்திருந்தார். அதை பார்த்த ரசிகர்களோ, இது போதுமே, எங்களுக்கு இது போதுமே என சந்தோஷமாக கூறினார்கள்.
​மணிரத்னம்​பொன்னியின் செல்வன் 2 நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொள்ளவில்லையே என்கிற ஒரேயொரு குறை தான் ரசிகர்களுக்கு இருந்தது. தற்போதும் அதுவும் தீர்ந்துவிட்டது. மேலும் பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சியில் மணிரத்னத்தை பார்க்கவும் ரசிகர்கள் ஆசைப்பட்டனர். அந்த ஆசையும் ஹைதராபாத் நிகழ்ச்சி மூலம் நிறைவேறிவிட்டது.
​​ராஜமவுலி​ஹைதராபாத் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் மட்டும் அல்ல மணிரத்னமும் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர் கூறியது அக்கட தேசத்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. மணிகாருவுக்கு பெரிய மனசு, அதனால் தான் இப்படி பேசுகிறார் என பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் ராஜமவுலிக்கு ஒரேயொரு நன்றி சொல்லி தெலுங்கு ரசிகர்களை இம்பிரஸ் செய்துவிட்டார் மணிரத்னம்.

​பாகுபலி​Ponniyin Selvan 2: பாகுபலி வரலைனா பொன்னியின் செல்வன் வந்திருக்காது: மணிரத்னம்மணிரத்னம் பேசியதாவது, ராஜமவுலி மட்டும் பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக எடுக்காவிட்டால் பொன்னியின் செல்வன் வந்திருக்காது. இந்திய வரலாற்றை படமாக மாற்ற வழி வகுத்திருக்கிறார் ராஜமவுலி. அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை நான் முன்பும் கூறியிருக்கிறேன் இன்று மீண்டும் கூறுகிறேன் என்றார்.

​நன்றி​ஹைதராபாத் நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, நான் மீண்டும் மீண்டும் இதையே சொல்வேன். என் துவக்கத்திற்காக மிக்க நன்றி. இருவர், ராவணன், குரு மற்றும் இன்று பொன்னியின் செல்வன். எனக்கு வாய்ப்பு அளித்த உங்களுக்கு நன்றி சார். நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன், தொடர்ந்து கற்பேன். அனைத்து வாய்ப்புகளுக்கும் நன்றி சார். உங்களுடன் சேர்ந்து பல படங்கள் பண்ண வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இந்த படம் ஒரு மேஜிக் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.