Ponniyin Selvan 2: பாகுபலி வரலைனா பொன்னியின் செல்வன் வந்திருக்காது: மணிரத்னம்

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதையடுத்து கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள்.

வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா!
அந்த நிகழ்ச்சிகளில் மணிரத்னம் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் மணிரத்னம் கலந்து கொண்டார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஹைதராபாத் நிகழ்ச்சியில் மணிரத்னம் பேசியதாவது,

முதலில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் தான் சார் பொன்னியின் செல்வன் படம் சாத்தியமானது. இதை நான் முன்பே கூறயிருக்கிறேன், இருந்தாலும் மீண்டும் கூறுகிறேன். நான் ராஜமவுலிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

பாகுபலி படம் மட்டும் இரண்டு பாகங்களில் வரவில்லை என்றால் பொன்னியின் செல்வன் வந்திருக்காது. அதனால் அவருக்கு நன்றி.

நான் ராஜமவுலிக்கு போன் செய்து பேசினேன், அவரை சந்தித்தபோது இதை சொன்னேன். அவர் படத்தால் தான் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக எடுக்க முடிந்தது. வரலாற்று படங்களை எடுக்க மொத்த திரையுலகிற்கும் நம்பிக்கை கொடுத்தார். இந்திய வரலாற்றை படமாக மாற்ற அவர் தான் வழி வகுத்தார் என்றார்.

மணிரத்னம் பேசியது தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அவர்கள் கூறியிருப்பதாவது,

பெருமையாக இருக்கிறது. சக இயக்குநரை பாராட்டிய மணிரத்னம் சாருக்கு நன்றி. உங்களின் பொன்னியின் செல்வன் 2 படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். சக இயக்குநரை இப்படி பாராட்ட பெரிய மனது வேண்டும். அது மணிரத்னம்காருவுக்கு இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஏன் கலந்து கொள்ளவில்லை. அவரை அழைத்து வாருங்கள், பார்க்க வேண்டும் போன்று ஆசையாக இருக்கிறது என்றார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தான் ஹைதராபாத்தில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் தன் செல்ல மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தார் ஐஸ்வர்யா ராய்.

கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் ரூ. 500 கோடி வசூல் செய்தது. இதையடுத்து பொன்னியின் செல்வன் 2 படம் ரூ. 1000 கோடி வசூலித்து புது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற்றது குறித்து கார்த்தி கூறியதாவது,

Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் ஏன் இவ்ளோ பெரிய ஹிட்டாச்சு?: கார்த்தி சொன்ன ரகசியம்

என் அம்மாவிடம் ஒரு படம் பார்த்து ரிசல்ட் வாங்குவது ரொம்ப கடினம். எங்கப்பாவின் சிந்து பைரவி படத்துக்கே ம்ம்ம் என்றார்கள். அண்ணாவின் நந்தாவை பார்த்துவிட்டும் ம்ம்ம்னு சொன்னாங்க. பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு முதல் முறையாக, யப்பா, படம் சூப்பர்பா என்றார்கள். அதனால் தான் படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றது என்றார்.

Trisha:பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2க்கு த்ரிஷாவுக்கு இவ்ளோ தான் சம்பளமா?

இதற்கிடையே பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு ரூ. 2.5 கோடி கொடுக்கப்பட்டதாகவும், இரண்டாம் பாகத்திற்கு ரூ. 3 கோடி சம்பளம் கொடுத்தார்கள் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.