நெய்வேலி நெய்வேலியில் பாமக நடத்திய போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதால் அங்குக் கலவரம் வெடித்துள்ளது. பாமகவினர் என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அங்கு இதைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. அதில் பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்பகுதி போர்க்களமாகக் காட்சியளித்தது. காவல்துறையினர் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரித்தனர். சில காவல்துறையினர் பாமகவினர் […]
