காசா: இஸ்ரேல்-ஹாமாஸ் அமைப்பினருடனான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 67 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரமலான் துவங்கிய சில மணி நேரத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடந்தாண்டு அக்டோபரில் இருந்து போர் நடந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு எண்ணற்ற தலைவர்களின் ஆதரவு உள்ளது. போரானது நான்கில் 3 பங்கு நிறைவடைந்து விட்டது. ஒரு மாதத்திற்குள் போர் முடிவுக்கு வந்து விடும். என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நடக்கும் போரில் இதுவரை 31000 பேர் பலியாகியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement