பெங்களூரு :நில அதிர்வு ஏற்படும் பகுதிகளில் ஆய்வு செய்ய, ஹைதராபாத்தில் இருந்து விஞ்ஞானிகள் வரவுள்ளனர்.கர்நாடகாவின் குடகு, ஹாசன், துமகூரு, சிக்கபல்லாபூர், தட்சிண கன்னடா உட்பட சில பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதால் அப்பகுதியினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.குறிப்பாக மலை பிரதேசமான குடகின் பல பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். தற்போது, தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்துள்ளதால், எப்போது என்ன நடக்கும் என்று பீதியில் உள்ளனர். இந்நிலையில், நில அதிர்வுக்கான காரணத்தை கண்டுபிடிக்க, தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் இருந்து விஞ்ஞானிகள் விரைவில் கர்நாடகா வரவுள்ளனர். ஒரு வாரம் தங்கி, நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, தடுப்பது எப்படி உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மாநில அரசு அதிகாரிகளுடன் தகவல்கள் பரிமாறி கொள்வர்.
பெங்களூரு :நில அதிர்வு ஏற்படும் பகுதிகளில் ஆய்வு செய்ய, ஹைதராபாத்தில் இருந்து விஞ்ஞானிகள் வரவுள்ளனர்.கர்நாடகாவின் குடகு, ஹாசன், துமகூரு, சிக்கபல்லாபூர், தட்சிண கன்னடா உட்பட சில
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.