மலாலா யூசுபசாய் கணவர் சோபாவில் தூக்கி எறிந்த சாக்ஸ்.. அடுத்து அவர் செய்த காரியம்!

பிர்மிங்காம்: நோபல் பரிசு பெற்றவரான மலாலா யூசுபசாய்க்கும் வழக்கம் போல பெண்கள் சந்திக்கும் அதே பிரச்சினைதான்.. கண்ட இடத்தில் அவரது கணவர் பொருட்களைப் போட்டு விடுகிறாராம். இப்படித்தான் அவரது சாக்ஸ் சோபாவில் கிடந்துள்ளது. இதை டிவீட் போட்டு வாரியுள்ளார் கணவரை.

மலாலா ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளானவர். இதையடுத்து அவர் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தார். சமீபத்தில் அவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளரான மாலிக் அஸ்ஸருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருமணமான எல்லாப் பெண்களுக்கும் வரும் அதே கடுப்பான அனுபவம் மலாலாவுக்கும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அந்த டிவீட் இதுதான். “சோபாவில் சாக்ஸ் கிடந்தது. அஸ்ஸரை இதுகுறித்துக் கேட்டேன். உங்களோடதா என்று. ஆமா, அழுக்கா இருக்கு.. தூக்கி வெளியில் போடணும் என்றார்.. நான் அதைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டேன்” என்று கூறியுள்ளார் மலாலா.

அமெரிக்காவைத் தொடர்ந்து.. கொலம்பியாவிலும் மர்ம பலூன்.. சீனா அனுப்பியதா?

இந்த டிவீட்டைப் பார்த்த மலாலாவின் கணவர் அதில் வந்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி பதில் டிவீட் போட்டார். அதில், சாக்ஸ் அழுக்காக இருந்தால் என்ன செய்ய வேண்டும் – வெளியில் தூக்கி எறிய வேண்டும், குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்று இருந்தது. இதில் குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும் என்ற ஆப்ஷனுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

இப்படி புருஷனும், பொண்டாட்டியும் டிவிட்டரில் வந்து குடும்பச் சண்டை போடவும், நெட்டிசன்களும் உள்ளே புகுந்து கருத்துக் கும்மியடிக்க ஆரம்பித்து விட்டனர். ஒருவர், வெல்கம் டு திருமண வாழ்க்கை என்று கலாய்த்துள்ளார்.

இன்னொருவரோ, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக்கும் உண்டு. மலாலாவைப் போலவே அவரது கணவரும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.

ஆட்சி கலைப்பு, சர்வாதிகாரி, தோனியின் ஹேர் ஸ்டைல்… பாகிஸ்தான் பர்வேஸ் முஷாரப் உயிர் பிரிந்தது!

இன்னொருவரோ, நான் பலமுறை எனது கணவரிடம் அவரது பொருட்களை உரிய இடத்தில் வைக்குமாறு சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கவே இல்லை. ஒரு நாள் அவரது ஹாக்கி அன்டர்வேரும், சாக்ஸும் காணாமல் போய் விட்டது.. அதன் பிறகுதான் அவர் ஒழுங்குக்கு வந்தார் என்று கூறியுள்ளார்.

திருமணமான பெண்களுக்கு எல்லா நாட்டிலும் இதே பிரச்சினைதான் போல.. கணவர்களே திருந்துங்கப்பா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.