ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இபிஎஸ் ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவெரா. கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 27-ல் நடைபெற உள்ளது. … Read more

சென்னையில் 17 லட்சம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை இல்லம் தேடி வழங்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் 17 லட்சம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை இல்லம் தேடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட இளங்கோ நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய டயாலிசிஸ் மையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜன.20) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “முதல்வர் சென்னை மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராக பணியாற்றியபோது, சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டார்கள். சென்னை … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பிரிவுகளை கண்டறிவதில் சிரமப்படும் முதியோர், மாற்றுத்திறனாளிகள்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதிய இடமில்லாமல் கிடைக்கும் சிறிய இடங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் சரியான வழிகாட்டி பலகைள், வழிகாட்டிகளும் இல்லாமல் சிகிச்சைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, ஒரே இடத்தில் இல்லாமல் மூன்று இடங்களில் அமைந்துள்ளது. பழைய கட்டிடம் கோரிப்பாளையத்திலும், தலைக்காயம் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு அண்ணா பஸ்நிலையம் அருகேயும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மைதானத்திலும் தனித்தனியாக உள்ளன. இந்த … Read more

பழங்குடியின மக்கள் வெளியே வந்து நல்ல பண்பாட்டை வளர்த்து, தங்களை உயர்த்தி கொள்ள வேண்டும் – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: பழங்குடியின மக்கள் வெளியே வந்து மற்றவர்களுடன் பழகி நல்ல பண்பாட்டை வளர்த்து தங்களை உயர்த்தி கொள்ள வேண்டுமெனபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி நேரு யுவகேந்திரா சார்பில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் தெய்வசிகாமணி வரவேற்றார். புதுச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன், நேரு யுவகேந்திரா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு … Read more

12,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் கூகுள் – முழு பொறுப்பு ஏற்பதாக சுந்தர் பிச்சை அறிவிப்பு

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் ஊழியர்கள் இதன்மூலம் வேலை இழக்கின்றனர். இது கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும். பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சார்பில் சம்பந்தப்பட்ட 12,000 ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் பிளாக் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ள தகவலில், “உங்களிடம் பகிர்ந்துகொள்ள சில கடினமான செய்திகள் … Read more

ராஜபாளையம் அருகே விதிமீறலில் ஈடுபட்ட இரு பட்டாசு ஆலைகளுக்கு சீல்

சிவகாசி: சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளில் உள்ள இரு பட்டாசு ஆலைகளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து நேற்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உற்பத்தியை நிறுத்தி பாதுகாப்பு நாளாக கடைபிடித்து சுய ஆய்வு மேற்கொண்டனர். அதேநேரம் வருவாய்த்துறை நடத்திய ஆய்வில் ராஜபாளையம் அருகே விதிமீறலில் ஈடுபட்ட இரு பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெற்று 1070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு கடைபிடிக்க … Read more

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் – மதுரை அதிமுகவில் சர்ச்சை

மதுரை: அதிமுக மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, நேற்று முன்தினம் மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த சம்பவம், அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவரை அதிமுகவினரும், திமுகவினரும் நெருங்கிய உறவினர்களாக இருந்தால் கூட ஒருவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மற்றவர்கள் போவதில்லை. அந்தளவுக்கு அதிமுகவினரை பொறுத்தவரையில் அவர்கள் கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் திமுகவினருடன் நெருக்கமாக இருப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தற்போதும் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட … Read more

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு இதுவரை செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? – மா.சுப்பிரமணியன் விளக்கம் 

சென்னை: “2021-22 மற்றும் 2022-23 ஆம் நிதியாண்டுகளில் தமிழ்நாடு அரசால் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொற்றா நோய்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தவிர, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.681.64 கோடி வழங்கப்பட்டு, இதுவரை ரூ.407.06 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களைத் தேடி மருத்துவம்” (MTM) திட்டத்தை பற்றி சமீபத்தில் நாளிதழ்களில் … Read more

தமிழகத்தில் 100% தாழ்தள பேருந்துகளை இயக்க முடியாதது ஏன்? – உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் 

சென்னை: “நூறு சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டும் என்றால், அதற்குரிய வகையில் பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்த வேண்டும். மழைக் காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் தாழ்தள பேருந்துக்குள் புகுந்து விடும்” என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த … Read more

மகளிர் ஆணையத் தலைவிக்கு பாலியல் துன்புறுத்தல் – கார் டிரைவர் கைது

புதுடெல்லி: டெல்லி மகளிர் ஆணையத் தலைவராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது; டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, போதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். காரில் தப்பிக்க முயன்ற அவரை பிடிக்க முற்பட்டபோது எனது கை அந்த காரின் ஜன்னல் கதவில்மாட்டிக் கொண்டது. இதையடுத்து,காருடன் 10-15 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்.மகளிர் ஆணையத் தலைவிக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற பெண்கள் எவ்வளவு … Read more