லக்கிம்பூரில் துணை ராணுவத்தினர் சூழ பாதுகாப்புடன் வாக்களித்த அமைச்சர் அஜய் மிஸ்ரா

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பலத்த பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார். அவரது பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார், துணை ராணுவப்படையினர் வந்திருந்தனர். வாக்களித்துவிட்டு வெளியில் வந்த அஜய் மிஸ்ராவிடம் கேள்விகள் எழுப்ப பத்திரிகையாளர்கள் குவிந்திருந்த நிலையில் எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளாமல் வெறும் வெற்றி அடையாளத்தை விரல்களில் காட்டிவிட்டுச் அவர் கிளம்பிச் சென்றார். உத்தரப் பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் லக்கிம்பூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. … Read more

உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீ தொலைவில் படைகளை நிறுத்திய ரஷ்யா: பாயும் பொருளாதாரத் தடைகள்

மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீ. தொலைவில் படைகளை நிறுத்தியுள்ளது ரஷ்யா. இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்காவின் மாக்ஸார் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில் தெற்கு பெலாரஸில் உள்ள மோசிர் விமான தளத்தில் படைகளின் முகாமும், 100 வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமான தளம் உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ.-க்கும் குறைவான தொலைவிலேயே இருக்கிறது. இதுதவிர மேற்கு ரஷ்யாவின் போச்செப் பகுதியில் கூடுதல் … Read more

மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது: கமல்ஹாசன்

சென்னை: எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என நான்காண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை, இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறதுச என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக … Read more

உ.பி. தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 22.62% வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்று 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி அங்கு 22.62% வாக்குப்பதிவாகியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பி, பிலிபிட் தொகுதியில் அதிகபட்சமாக வாக்குப்பதிவாகியுள்ளது. அங்கு 11 மணி நிலவரப்படி 27.43% வாக்குப்பதிவானது. அதனையடுத்து ஃபதேபூரில் 22.49% வாக்குப்பதிவாகியுள்ளது. ஹர்தோய் தொகுதியில் மிகக் குறைவாக 22.27% வாக்குப்பதிவாகியுள்ளது. 59 தொகுதிகளில் களம் காணும் 624 வேட்பாளர்கள்: இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் லக்கிம்பூர் தொகுதி மிகவும் … Read more

திமுகவில் இணைந்த 10 சுயேச்சைகள்: அரியலூரில் 2 நகராட்சி, 2 பேரூராட்சிகளை தன்வசமாக்கியது திமுக

அரியலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் 10 பேர் திமுகவில் இணைந்ததால், அரியலூரில் 2 நகராட்சி, 2 பேரூராட்சிகளை திமுக தன் வசமாக்கியுள்ளது. அரியலூர் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக தலா 7 இடங்களிலும், சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இங்கு திமுக, அதிமுக இருக்கட்சிகளுக்கு பெரும்பான்மை என்பது இல்லாத நிலை ஏற்ப்பட்டது. இந்த நிலையில் அரியலூரில் 3 சுயேச்சைகள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் நேற்று … Read more

இந்தியாவில் புதிதாக 15,102 பேருக்கு கரோனா: பிஎம் கேர்ஸ் பிப்.28 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,102 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 12.6% அதிகம். அன்றாட பரவல் 1.28 சதவீதம் என்றளவில் உள்ளது. (100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதின் கணக்கு). 49 நாட்களுக்குப் பின்னர் நேற்று கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை முதன் முறையாக ஒரு லட்சத்துக்கும் கீழ் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது: … Read more

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் – ‘சுவிஸ் ரகசியங்கள்’ ஆவணத்தில் தகவல்

சுவிட்ஸர்லாந்தில் உள்ள கிரிடிட் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி இருந்த உலகளாவிய அரசியல்வாதிகள், உயர்மட்ட அதிகாரிகள், போதை கடத்தல் தலைவர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில், பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்கள், ஜெனரல்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரான ஜெனரல் அக்தர் அப்துர் ரஹ்மான் கான் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் முஜாஹிதீன் அமைப்பின் உருவாக்கத்தில் மூளையாக கருதப்படுபவர். கிரிடிட் சுவிஸ் வங்கி மூலம் அவர் முஜாஹிதீன் … Read more

இரவுநேரத்தில் செயல்படும் உணவகங்களை விரைவாக மூடும்படி கட்டாயப்படுத்த போலீஸாருக்கு அதிகாரமில்லை : சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இரவு நேர உணவகங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் விரைவாக மூடும்படி கட்டாயப்படுத்த போலீஸாருக்கு அதிகாரமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் உள்ள இரவுநேர துரித உணவகத்தின் அன்றாடசெயல்பாடுகளில் போலீஸார் குறுக்கிட்டு இடையூறு செய்வதாகவும், இது தங்களது அடிப்படை உரிமையைப் பாதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி அந்த உணவக உரிமையாளர் எஸ்.குணராஜாஎன்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தொந்தரவு தரும் போலீஸார் அதில், ‘‘கடந்த 11 ஆண்டுகளாக இப்பகுதியில் இரவுநேர … Read more

உ.பி தேர்தல்: லக்கிம்பூர், லக்னோ, உன்னாவ் உள்ளிட்ட 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே மூன்று கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் இன்று (பிப்.22) 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் லக்கிம்பூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறி விவசாயிகள் பத்திரிகையாளர் உள்பட … Read more

2 மாகாணங்களுக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கியது ரஷ்யா: உக்ரைனில் போர் பதற்றம் அதிகரிப்பு

மாஸ்கோ: உக்ரைனின் 2 மாகாணங்களை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது. இதனால் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைனில் 24 மாகாணங்கள் உள்ளன. இதில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள டான்ஸ்க், லாஹன்ஸ்க் மாகாணங்களில் ரஷ்ய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த மாகாணங்களை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள், உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. இந்தப் பின்னணியில் உக்ரைனின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது. இதற்குபதிலடியாக, உக்ரைனுக்கு … Read more