சர்வதேச தினத்தை முன்னிட்டு வலிப்பு நோய் விழிப்புணர்வு: நோயாளிகளை கையாள்வது குறித்து விளக்கம்

சென்னை: சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஒருவருக்கு வலிப்புவந்தால் சாவி, இரும்பு பொருட்களை அவரிடம் கொடுக்கக்கூடாது. நினைவு திரும்பும் வரைதண்ணீர் தரக்கூடாது என்று கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனை டீன் சாந்திமலர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: வலிப்பு நோய் என்பது மூளையில்ஏற்படும் பாதிப்பால் வருகிறது. இது தொற்று நோய் அல்ல. வலிப்புநோய் மனவியாதி அல்ல. வலிப்புக்கான மாத்திரை, … Read more

உஜ்ஜைனியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிப்பு

உஜ்ஜைனி: மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள பட்நகர் தாலுகா, கல்மோரா என்ற கிராமத்தில் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன. மாநில தொல்பொருள் ஆய்வுத் துறை சார்பில் டாக்டர் விஷ்ணு தர் வாகன்கர் ஆராய்ச்சி நிலையம் இந்த அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலின் எஞ்சிய பகுதிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆய்வு அதிகாரி டாக்டர் துருவேந்திர ஜோதா கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நில அளவைப்பணியின்போது … Read more

உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு சீனா ஆதரவு; ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை சீனா ஆதரிப்பதை ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையாகக் கருத வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் தலைவர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வரும் … Read more

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – 54 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 54 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இதன்படி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பான முறையான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஸ்வீட் செல்பி ஹெச்டி, பியூட்டி கேமிரா, மியூசிக் பிளேயர், மியூசிக் பிளஸ், வால்யூம் பூஸ்டர், வீடியோ பிளேயர்ஸ் மீடியா, விவா வீடியோ எடிட்டர், … Read more

கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.88 கோடி வாடகை வசூல்: இந்து சமய அறநிலையத் துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான இடங்களில்வசிப்பவர்களிடம் ரூ.88 கோடிவாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அதில் குறிப்பாக கோயில் திருப்பணி, திருத்தேர், அடிப்படை வசதிகள் மேம்பாடு, பணியாளர்கள் நலத்திட்ட உதவி கள், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்புஉள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வாடகை … Read more

வகுப்புவாத பாடல், மதச்சார்பற்ற இசையுடன் வாக்குகளை கொள்ளை அடிக்கும் அரசியல் கட்சிகள்: மத்திய அமைச்சர் நக்வி குற்றச்சாட்டு

ராம்பூர்: வகுப்புவாத பாடல்களுடன் கூடிய மதச்சார்பற்ற இசையை இசைத்து எதிர்க்கட்சிகள் வாக்குகளை கொள்ளை அடிக்கின்றன என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார். உத்தரபிரதேசத்தில் நேற்று நடைபெற்ற 2-வது கட்ட வாக்குப்பதிவில் ராம்பூரிலுள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் தனது வாக்கைச் செலுத்தினார். வாக்குச்சாவடிக்கு வெளியே செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: உ.பி.யில் கடந்த 5 ஆண்டுகளில் பல நல்ல திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக … Read more

தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிப்பு: ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: “தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்“ என அமெரிக்க ராணுவச் செயலர் கிறிஸ்டின் வார்முத் தெரிவித்துள்ளார். உலகளவில் மிக அதிகமான கரோனா நோயாளிகளையும், கரோனா உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது அமெரிக்கா. ஆனால், அங்கு இன்னும் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கலகம் செய்து கொண்டிருக்கின்றனர். ராணுவத்திலும் ஒரு குறிப்பிட்ட சாரார் தடுப்பூசி போடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராணுவச் செயலர் கிறிஸ்டின் வார்முத், “ராணுவத்தில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். இவர்களால் படைகளின் மற்ற வீரர்களுக்கு அச்சுறுத்தல். படைகளை எப்போதும் தயார்நிலையில் … Read more

10, 12-ம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான சர்ச்சை: தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடத்துக்கு முன் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்

சென்னை: 10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில், வினாத்தாள் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வினாத்தாளை தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புமாணவர்களுக்கான முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9-ம் தேதி தொடங்கியது. பொதுத் தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதேபோன்று திருப்புதல் தேர்வும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்ற பள்ளிக்கல்வித் துறை உத்தரவின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. … Read more

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் ஏபிஜி ஷிப்யார்டு முறைகேடு நடந்தது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத மோசடி நிகழ்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் (2013) நிகழ்ந்தது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். குஜராத்தைச் சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும்ஐசிஐசிஐ உள்ளிட்ட 28 வங்கிகளில் பெற்ற ரூ.22,842 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது. கடந்த 2013-ம்ஆண்டு நிகழ்ந்த இந்த மோசடியின்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி … Read more

அமெரிக்காவிலும் எதிரொலித்த ராகுல் பேச்சு: பற்றி எரியும் பாக், சீனா நட்புக் கருத்து

வாஷிங்டன்: பாகிஸ்தானும், சீனாவும் கூட்டாளிகளாகிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதை ஏற்றுக்கொள்ள இயலாது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று நேற்று (புதன்கிழமை) காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய விவகாரங்கள் அமெரிக்கா வரை எதிரொலித்துள்ளது. முன்னதாக நேற்று அவையில் பேசிய ராகுல் காந்தி, “இந்தக் குடியரசு தின விழாவிற்கு ஒரு விருந்தினரை அழைத்துவர முடியவில்லை. அது ஏன் என்று உங்களுக்கு நீங்களே … Read more