புதுச்சேரியின் 250 ஆண்டுகால ராஜ்நிவாஸில் சேதம்: வேறு இடம் மாறும் ஆளுநர் மாளிகை

புதுச்சேரி: 250 ஆண்டு பழமையான புதுச்சேரி ராஜ்நிவாஸ் கட்டுமானத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புக்காக வேறு இடத்துக்கு விரைவில் மாறும் ஆளுநர் மாளிகை மாற்றப்பட உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுச்சேரியில் பிரெஞ்சு கட்டடக்கலையில் வடிவமைக்கப்பட்ட 250 ஆண்டு பழமையான ராஜ்நிவாஸ் கட்டுமானத்தில் கடும் சேதத்தினால் பொதுப்பணித்துறை பரிந்துரைப்படி பாதுகாப்புக்காக வேறு இடத்துக்கு ஆளுநர் மாளிகை விரைவில் மாறவுள்ளது. புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே கடற்கரையொட்டி ராஜ்நிவாஸ் அமைந்துள்ளது. கடந்த 1733ம் ஆண்டு 1764ம் ஆண்டு வரை ஹோட்டலொன்று … Read more

அருணாச்சல் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் அவர்களது சொந்த ஊர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தின் கமங் பகுதியில் உள்ள உயரமான மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அங்கு கடந்த 6-ம் தேதி ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவம் 7 வீரர்களை சடலமாக மீட்டது. மீட்கப்பட்ட ராணுவ வீரர்களின் உடல் அசாமின் … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் : எடப்பாடி பழனிசாமி

சேலம்: ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் நடைபெறும் சூழலில் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “ ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். மீண்டும் … Read more

'குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.. ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமர் ஆவார்' – ஒவைசி

ஹைதராபாத்: ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார் என மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். ஹிஜாப் அணிந்து முஸ்லிம் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, ஒவைசி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தான் பேசிய வீடியோ அடங்கிய ட்வீட் ஒன்றை பதிவிட்ட ஒவைசி, அதில், “ஹிஜாப் அணிந்த பெண்கள் கல்லூரிக்கு செல்வார்கள். மாவட்ட கலெக்டர்களாக, நீதிபதிகளாக, டாக்டர்களாக, தொழிலதிபர்களாக மாறுவார்கள். அதனை பார்க்க நான் உயிருடன் … Read more

தமிழக மீனவர்கள் கைது கொடுமைக்கு முடிவே  இல்லையா?  – ராமதாஸ்

தமிழக மீனவர்கள் கைது கொடுமைக்கு முடிவுவே இல்லையா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அவர்களின் படகுகளுடன் சிங்களப்படை கைது செய்திருக்கிறது. சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது; இதை இனியும் இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது. ஜனவரி 31-ஆம் தேதி 21 பேர், பிப்ரவரி 8-ஆம் தேதி 11 பேர், இன்று 12 … Read more

கோவாவில் நாளை தேர்தல்: மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?

பனாஜி: சின்னஞ்சிறிய மாநிலமான கோவாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கோவா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு, பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மொத்தம் 332 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோவா தேர்தலில் மொத்தம் 11.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். … Read more

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கையின் அட்டூழியங்களை எவ்வளவுகாலம் வேடிக்கை பார்க்கப்போகிறோம்?: தினகரன் கேள்வி

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இலங்கை அட்டூழியங்களை எவ்வளவு வேடிக்கை பார்க்கப்போகிறோம்? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது: ”தமிழக மீனவர்கள் அண்மைக்காலமாக அடுத்தடுத்து சிறை பிடிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், படகுகளைக் கைப்பற்றி ஏலம் விடுவதுமான இலங்கை அரசின் அட்டூழியங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு … Read more

கரோனா பாதிப்பு 44,877 ஆக குறைவு: சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 5.37 லட்சமாக சரிவு

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 44,877 என்றளவில் உள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 5,37,045 ஆக சரிவடைந்துள்ளது. நாடுமுழுவதும் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே அன்றாட கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் எல்லா மாநிலங்களிலும் படிப்படியாக தளர்வுகள் அமலாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக கரோனா பரவலும் வெகுவாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: கடந்த 24 … Read more

கோவை  மாவட்ட ஊர்க்காவல் படையில் 3 திருநங்கைகள் பணி நியமனம்: பொதுமக்கள், பல்வேறு தரப்பினர் வரவேற்பு

கோவை: கோவை மாவட்ட ஊர்்க்காவல் படையில் 3 திருநங்கைகள் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில், மாவட்ட ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் 380-க்கும் மேற்பட்டோர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தைச் சேர்்ந்த திருநங்கைகளான சிறுமுகையைச் சேர்ந்த வருணாஸ்ரீ(21), தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த மஞ்சு(29), … Read more

லஞ்சம் பெற்று பயனர்களின் தகவல் வெளியீடு: 20 இபிஎப்ஓ பணியாளர்கள் மீது வழக்கு – சிபிஐ அதிரடி

லஞ்சம் பெற்று பிஎப் பயனாளர்கள் பற்றிய தகவலைத் வெளியிட்ட 20 இபிஎப்ஓ நிறுவன பணியாளர்கள் மீது மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்கு பதிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் பேடிஎம், போன்பே, கூகுள் பே போன்ற தனியார் நிறுவனங்களுக்கு இவர்கள் பயனர்கள் பற்றிய விவரங்களைத் தந்துள்ளது தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு பயனர்கள் பற்றிய தகவல்களை இபிஎப்ஓ அலுவலக பணியாளர்களே அளிப்பது தொடர்பாக வெளியான புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தியது. குண்டூரில் உள்ள … Read more