எடப்பாடியில் உதயநிதியின் பாதுகாப்பு வாகனத்தின் குறுக்கே குட்டியானை புகுந்ததால் பரபரப்பு..!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சேலம் வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழா நிகழ்வு, அரசு நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கான விருது நிகழ்ச்சி … Read more

பெற்றோரை இழந்த சிறுமி..  பலாத்காரம் செய்த அண்ணன் தம்பி.!

பெற்றோரை இழந்து சிறுமி  உறவினர்கள் வீட்டில் வசித்து வந்த போது அவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் அளித்த அண்ணன் தம்பி இருவருக்கும் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம்  ராசபாளையம் பகுதியைச் சார்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு சிங்காரவேலு ராஜு என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதே பகுதியைச் சார்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பெற்றோரை இழந்தவர் அவர். தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.  கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக … Read more

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என்று மற்ற வேண்டும்! 

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என்று மற்ற வேண்டும் என்று, மதுரை மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில், பாஜக தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஜே.பி.நட்டாவுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஜி-20 மாநாட்டின் தலைவராக பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த உலக தலைவருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முக்கிய தீர்மானமாக மதுரை பெரியார் … Read more

திருவள்ளூர் : வீட்டில் மறைத்து வைத்து மது பாட்டில்கள் விற்பனை – 2 பெண்கள் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஆரணி கம்பர் தெரு மற்றும் அத்திக்குளம் மேடு பகுதிகளில் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஆரணி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கம்பர் தெரு பகுதியில் திருட்டுத்தனமாக … Read more

பூரண மதுவிலக்கு குறித்து திமுக எம்.பி கனிமொழி பேசிய வீடியோ வைரல்..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பறை இசை கலைஞர் வேலு திருமண விழாவில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார். திருமண நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி பேசியதாவது “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. இதைப்பற்றி கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் தேவையில்லை. வெற்றி என்பது காங்கிரஸ் வேட்பாளருக்கு உறுதியான ஒன்று. எதிர்க்கட்சியினர் பல திசைகளில் பிரிந்து கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் … Read more

இன்னும் 3 நாட்களே அவகாசம் : உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா? எப்படி அதை சரிபார்ப்பது?

உங்களின் மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா? என்பதை நீங்களே சரிபார்த்துக்கொள்ளும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம், மானிய விலையில் மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் தமிழகத்தில் 2.67 கோடி பேர் உள்ளனர்.  இந்த நிலையில் இவர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.  … Read more

மேற்கூரை அமைக்கும் பணியின்போது பரிதாபம்.! 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலி.!

கோவை மாவட்டத்தில் மேற்கூரை அமைக்கும் பணியின்போது 30 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் திருவிக நகர் பகுதியில் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜான் சேவியர் (37). இவர் நாகமாணிக்கம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை அமைக்கும் வேலைக்காக சென்றுள்ளார். அப்பொழுது ஜான் சேவியர் 30 அடி உயரத்தில் இன்று வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மேற்கூறையில் இருந்த இரும்புக்கு கம்பிகள் சரிந்து விழுந்துள்ளது. இதனால் நிலை … Read more

மேட்டூர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

மேட்டூர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று, தமிழக அரசை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ஆம் நாள் பாசனத்திற்காக நீர் திறந்தபொழுதும், மழை வெள்ள பாதிப்புகளால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமாக தொடங்கியதால் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயார் நிலையை எட்டவில்லை. இந்நிலையில் வழக்கமான நிகழ்வாக … Read more

கூடலூர் அருகே பரிதாபம்.! காட்டு யானை தாக்கி வாலிபர் பலி.!

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சீபோர்த் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத்(38). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜமல் என்பவருடன் நேற்று மாலை தனியார் காபி தோட்ட பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அப்பகுதியில் இருந்த காட்டு யானை ஒன்று, இவர்கள் இரண்டு பேரையும் விரட்டியது. இதையடுத்து யானை பிடியில் சிக்கிய இரண்டு பேரையும் காட்டு யானை தாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து … Read more

நடுவானில் உயிரிழந்த விமான பயணி.! போலீசார் தீவிர விசாரணை.!

நேற்று முன்தினம் இரவு அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் இருந்து நூற்று முப்பத்து நான்கு பயணிகளுடன் விமானம் ஒன்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து இறங்க தயாராக இருந்தது.  இந்த விமானத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சஜித் அலி என்பவர் சென்னையில் கல்லீரல் சிகிச்சை பெறுவதற்காக பயணம் செய்து வந்தார். இந்நிலையில், விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்த போது, சஜித் அலிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.  இது தொடர்பாக அவரது சகோதரர் விமான … Read more