கட்டுநாயக்கவில் இருந்து நீர்கொழும்பு நகரத்திற்கு 40 நிமிடங்களில் பயணிப்பதற்கான ரெயில் சேவை

கட்டுநாயக்கவில் இருந்து நீர்கொழும்பு நகரத்திற்கு 40 நிமிடங்களில் பயணிப்பதற்கான ரெயில் சேவைக்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக ,கட்டுநாயக்க – நீர்கொழும்பு ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையில் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்கான ரெயிலை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது. இதன் மூலம் கொழும்பு கோட்டையிலிருந்து கட்டுநாயக்க வரை செல்லும் பயணிகளுக்கு தற்போது  40 நிமிடங்களுக்குள் சென்றடைவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. … Read more

காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்படுபவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு மாத்திரமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என வைத்திய ஆலோசகரான வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோவிட் தொற்றுக்குள்ளான நோயாளிகள் மருத்துவ ஆலோசனையைப் பெறாமல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotic) உட்கொள்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார். ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், கோவிட் தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் பெற்ற பின்னர் வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் குறுகிய கால காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள். சாதாரண காய்ச்சலுக்கு படுக்கை ஓய்வு சிறந்த … Read more

பயிலுனர் ஆசிரியர்களுக்கான நிகழ்வில் 51 வது படை பிரிவு தளபதி ஆரம்ப உரை

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய கல்வியியற் கல்லூரியில் ஏறத்தாழ 750 பயிலுனர் ஆசிரியர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற செயலமர்வில் ‘தலைமைத்துவம்’ என்ற தலைப்பில் ஆரம்ப உரையொன்றை நிகழ்த்தினார். கல்லூரியின் பயிற்சி குழு எண் 18, 19 மற்றும் 20 களின் கீழான தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இன மாணவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர். ஆரம்ப அமர்வின் போது, மேஜர் ஜெனரல் சந்தன … Read more

இரு கட்சி சின்னங்கள் நீக்கப்பட்டன! வெளியானது அதிவிசேட வர்த்தமானி

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு இதுவரை ஒதுக்கப்படாமலுள்ள கட்சி சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளதுடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.  குறித்த அறிவிப்பின் படி அந்த பட்டியலில் இருந்து கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source link

பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் , கண் சிகிச்சை நோயாளிகளுக்கான உள்ளக வார்ட் திறப்பு

வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் மருத்துவ நோயாளிகளுக்கான உள்ளக வார்டு வசதி அப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜெனரல் மிலிந்த பீரிஸினால் 2022 பெப்ரவரி 15ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவில் அதிதிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பல்கலைக்கழக வைத்தியசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் பி.ஜெயன் மெண்டிஸ், வைத்தியசாலை சேவையின் பணிப்பாளர் பிரிகேடியர் பி.எஸ்.திலகரத்ன, நிர்வாகப் பணிப்பாளர் கேர்ணல் ஈஎம்ஜீஎச்கேபி தெஹிதெனிய RWP RSP … Read more

கோவிட் தடுப்பூசியால் ஏற்படும் பாலியல் பிரச்சினைகள்

கோவிட் தடுப்பூசி ஆண்மைக் குறைவை ஏற்படுத்துவதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரம் இல்லை என மருத்துவர் பிரியங்கர ஜெயவர்தன தெரிவித்துள்ளார். கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சில பாலியல் பிரச்சனைகள் இருக்கலாம் என்றாலும், கோவிட் தடுப்பூசியால் ஆண்மைக்குறைப்பாடு பிரச்சினைகள் தொடர்பில் ஆதாரமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, பாலியல் செயற்பாடு மற்றும் குழந்தையின்மை போன்ற சிக்கல்களைத் தவிர்க்க கோவிட் தடுப்பூசியை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உட்பட அனைவருக்கும் கோவிட் … Read more

நான்காவது கொழும்பு கடற்படைப் பயிற்சி நிறைவு

இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட நான்காவது கொழும்பு கடற்படை பயிற்சி – 2022 திங்கட்கிழமை (பெப்ரவரி, 14) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த கடற்படை பயிற்சி இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிற்சியானது கடற்படை வீரர்களின் தொழில்முறை மற்றும் அனுபவங்களை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியின் கடல் சார் பயிற்சிகள், நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பிரசன்ன மஹாவிதான தலைமையில் இலங்கை … Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக ரத்து செய்ய முடியாது! அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல்

பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்று முழுதாக ரத்து செய்ய முடியாது என அரசாங்கம் கூறியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்தால் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 310 பேர் விடுதலைலயாகும் சாத்தியம் காணப்படுவதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்களை சுட்டிக்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாகவே தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரணை செய்ய முடிந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தினை … Read more

இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை மற்றும் பெலாரஸ் மேம்படுத்தல்

பெலாரஸ் குடியரசிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள ரஷ்யாவுக்கான தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே, 2022 பிப்ரவரி 02-05 வரையான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பெலாரஸ் அதிகாரிகளுடன் பல சந்திப்புக்களை நடத்தினார். மின்ஸ்கில் தங்கியிருந்த தூதுவர், பெலாரஸ் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு அலெக்சாண்டர் லுகாஷென்கோவிடம் தனது நற்சான்றிதழ் கடிதங்களை வழங்கி வைத்ததுடன், வெளிவிவகார அமைச்சர் மாண்பமிகு விளாடிமிர் மேக்கியுடன் உரையாடிய அதே வேளையில், ஒத்துழைப்பின் வாய்ப்புக்கள் குறித்து பெல்டா செய்தி நிறுவனத்திற்கு செவ்வியளித்தார். பேராசிரியர் … Read more

இலங்கை வருகின்றார் அமெரிகாவின் புதிய தூதுவர்!

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்காவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங் இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ளார். அவர் தனது நற்சான்றிதழ்களை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அரசாங்கத்திடம் கையளிப்பார் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. சியோலில் பிறந்த ஜூலி சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். ஈராக்கின் … Read more