Doctor Vikatan: சம்மரில் weight loss  செய்வது சுலபமா?

Doctor Vikatan: வருடத்தின் மற்ற நாள்களைவிட, சம்மரில் உடல் எடையைக் குறைப்பது மிகவும் சுலபம் என்கிறாள் என் தோழி. அவள் அப்படித்தான் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 6 கிலோ வரை குறைத்ததாகச் சொல்கிறாள். சம்மரில் வெயிட்லாஸ் செய்வது ஈஸி என்பது உண்மையா…. அப்படியானால் அதற்கான உணவுப்பழக்கம் எப்படியிருக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: உடல்பருமனுக்கும் மூட்டுவலிக்கும் என்ன தொடர்பு? … Read more

 தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று முதல் 3 நாட்களுக்குத் தமிழகத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”05/04/2024 (வெள்ளிக் கிழமை) 06/04/2024 (சனிக்கிழமை) மற்றும் 07/04/2024 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  … Read more

டிமிக்கி கொடுக்கும் சிறுத்தை.. மயிலாடுதுறையில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை.. இதோ லிஸ்ட்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தை சாலைகளில் Source Link

“வாழ்வு கொடுத்த இரட்டை இலைக்கு ஓ.பி.எஸ்ஸின் மனசாட்சி வாக்கு கேட்டுள்ளது..!” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பார்வர்ட் பிளாக் தலைவர் மூக்கையாத்தேவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ஆர்.பி.உதயகுமார் பின்பு ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கச்சத்தீவு பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தபோது, அதற்கு எதிராக குரல் கொடுத்ததில் முக்கியமானவர் மூக்கையாத்தேவர். கச்சத்தீவை மீட்க பல்வேறு வழக்குகளை முன்மாதிரியாக எடுத்துரைத்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடுத்தார். கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை முடிவு. … Read more

 இன்றைய ஐ பி எல் போட்டி :  ஐதராபாத்தில் சென்னை – ஐதராபாத் அணிகள மோதல்

ஐதராபாத் இன்று ஐதராபாத்தில் நடைபெறும் ஐ பி எல் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. தற்போதைய 17 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று  ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 18 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.  ஐதராபாத் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் வீழ்ந்தது. ஆனால் அடுத்த … Read more

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு

டெல்லி கர்நாடகா அரசு தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளது. தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசு சார்பில் கூட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரையும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான … Read more

மதுரா தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த நடிகை ஹேமமாலினி

மதுரா இன்று நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கலி செய்துள்ளார். ஏப்ரல் 26 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 28 ஆம் தேதி தாக்கல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன்  நிறைவடைகிறது. நாளை  வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வருகிற 8 ஆம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். கடந்த 2014 ஆம் ஆண்டு பாலிவுட்டில் “கனவுக்கன்னி” என்று அழைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் … Read more

தேர்தல் ஆணையத்தை  நாடகக் கம்பெனி என விமர்சித்த சீமான்

சென்னை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி என விமர்சித்துள்ளார். ’ மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இரா.கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.. சீமான் தனது உரையில், ”தேர்தல் ஆணையமே ஒரு பெரிய நாடக கம்பெனி தான். அப்பாவி மக்களிடம் பணத்தைப் பிடிக்கும் தேர்தல் ஆணையம், வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதில்லை. தொழில்நுட்பம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு … Read more

சாத்தியமே இல்லை.. கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்க முடியாது.. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு: கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். மேலும், கச்சத்தீவை திரும்ப வழங்கினால் இலங்கையின் கடல்வளம் சூறையாடப்படும் எனவும் தடாலடியாக கூறியுள்ளார். தமிழக அரசியலில் தற்போது கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாகியுள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு 1974ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மீண்டும் இந்த Source Link

8050 தமிழக வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிப்பு

சென்னை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவித்துள்ளார். தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம், “திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 18ம் தேதிக்குள் தபால் வாக்குக்களைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தபால் வாக்குகளை வாங்க முதல்முறை வீடுகளுக்குச் செல்லும்போது வாக்காளர்கள் வீட்டில் இல்லை … Read more