வைப்பு நிதி வட்டி குறைப்பு.. 2 வங்கி முடிவால் மக்கள் அதிர்ச்சி..!

ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் ஒமிக்ரான் மூலம் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வர வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் பழைய வட்டி விகிதத்தையே திரும்பவும் அறிவித்துள்ளது. 10வது முறையாக வட்டியை உயர்த்தாமல் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள காரணத்தால் வங்கிகளும் கடன் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தியுள்ளது மக்கள் அதிர்ச்சி அடைந்து … Read more

`தமிழகம் விரும்பும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்!' – முதலீடு செய்வது எப்படி?

மத்திய, மாநில அரசாங்கங்கள் பெண்களுக்கென்று பிரத்யேகமாகப் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. பெண்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்குவதில் ஆரம்பித்து, அவர்களின் பெயரில் கடன் வாங்கினால் வட்டிச் சலுகைகள் என்பது வரை நிறைய சலுகைகள் பெண்களுக்கு உண்டு. அந்த வகையில் பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட `சுகன்யா சம்ருதி யோஜனா – Sukanya Samrudhi Yojana’ எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டம், 2015-ம் ஆண்டு, ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் ஆரம்பிக்கப்பட்டது. பெண் குழந்தைகளின் … Read more

22 ஆண்டாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்த நபர்! திடீரென பெரும் கோடீஸ்வரர் ஆனது எப்படி?

இந்தியாவில் தொழிலாளி ஒருவருக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை வசித்து வருபவர் ஏ.கே.ஷாஜி. இவர் மைஜி என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை பல வருடங்களாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சிஆர் அனிஷ் என்பவர் சுமார் 22 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஏ.கே.ஷாஜி, அனிஷுக்கு இத்தனை ஆண்டுகாலம் விசுவாசமாக பணியாற்றியதற்கு பரிசு ஒன்று கொடுக்க நினைத்துள்ளார். அந்தவகையில் சுமார் 1 கோடி மதிப்புள்ள பென்ஸ் … Read more

கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா:  கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியதாவது, உலகம் இன்னும் கொரோனாதொற்றுநோயின் பிடியிலிருந்து விடுபடவில்லை. இன்னும் அதிகளவிலான மாறுபட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார். உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸுடன் தடுப்பூசி உற்பத்தி நிலையங்களுக்குச் சென்ற  அவர்,  செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தொற்றுநோய் எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் கணிக்க முடியாது.   இப்போது சிலர் … Read more

எதிர்க்கட்சிகளின் படகுகள் மூழ்கத் தொடங்கிவிட்டது – பிரதமர் மோடி பேச்சு

லக்னோ: உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று நடைபெற்றது. கஸ்கஞ்ச் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பா.ஜ.க. கொடி உயரப் பறக்கிறது. இதனால் போட்டியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அயோத்தியில் பாரத ரத்னா பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் பிலிம் சிட்டியில் … Read more

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை

சென்னை: கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிமுறைகளை காற்றில் பறக்க விடுவதாக தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க மனு | Dinamalar

பெங்களூரு-பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க, கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை கமிஷனர் கோரிக்கை வைத்துள்ளார்.பல்கலைக்கழக பட்டப்படிப்பு செமஸ்டர் தேர்வுகளை ஒரு மாதம் ஒத்திவைக்க வேண்டுமென உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலரிடம், கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறை கமிஷனர் பிரதீப் கோரிக்கை மனு அளித்துள்ளார்.கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:கொரோனா மூன்றாம் அலை மற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக பாடத்திட்டங்களை நிறைவு செய்ய முடியவில்லை.ஆனால் சில பல்கலைக்கழகங்கள் தேர்வுகளுக்கான கால அட்டவணையை நிர்ணயித்துள்ளன. பாட திட்டங்களை முழுமையாக முடிக்க … Read more

அடுத்த 5 வருஷத்துக்கு நான்தான் ராஜா.. அசைக்க முடியாத சந்திரசேகரன்..!

டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருக்கும் என்.சந்திரசேகரன் அவர்களுக்கு மீண்டும் பணிக்காலம் நீட்டிப்பு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க டாடா குழுமத்தின் தலைமை அலுவலகமான பாம்பே ஹவுஸ்-ல் இன்று முக்கியமான உயர்மட்ட நிர்வாகக் குழு நடந்தது. இக்கூட்டத்தில் நீண்ட காலத்திற்குப் பின் டாடா குழுமத்தின் சேர்மன் எமரிட்டஸ் ஆன ரத்தன் டாடாவும் கலந்து கொண்ட காரணத்தால் இக்கூட்டம் மிகவும் முக்கியமானதாக மாறியது. இக்கூட்டத்தின் முடிவில் என்.சந்திரசேகரன் அவர்களின் … Read more

`இதுதான் கடைசி வாய்ப்பு!'- விஜய் மல்லையாவை எச்சரித்த உச்சநீதிமன்றம்

இந்திய வங்கிகளில் கடன் பெற்று திருப்பி தராமல் லண்டனுக்கு சென்ற மல்லையா, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தனது வாரிசுகளின் பெயருக்கு மாற்றினார். நீதிமன்ற உத்தரவை மீறியதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. Supreme Court Of India விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ்; விரைவில் லண்டன் பங்களாவை காலி செய்வாரா? பல முறை நேரில் ஆஜராக உத்தரவிட்டும், அவர் வராததை தொடர்ந்து, நேரில் ஆஜராவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாகவும் அதுவே கடைசி … Read more

ஹிஜாப் மாணவிக்கு ஆதரவு தெரிவித்த RSS: முஸ்லீம் இந்து இருவரும் ஒரே DNA என கருத்து

கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பாக பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து, முஸ்கன் கான் என்ற மாணவியை இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷமிட்டனர்.இந்த நிலையில் இதற்கு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் இஸ்லாமிய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கல்லுரிக்குள் வந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை சுற்றி சில இந்து அமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர், அதனை தொடர்ந்து முஸ்கன் கான் என்ற … Read more