ஜப்பான் பிரதமருக்கு சந்தன மர புத்தர் சிலை பரிசு

கர்நாடக கைவினைக் கலைஞர் களால் உருவாக்கப்பட்ட சந்தன மரத்தாலான புத்தர் சிலையை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். இந்தியா வந்துள்ள பிரதமர் கிஷிடா, டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது கர்நாடகா வில் தயாரான சந்தன மர நுண் சிற்பத்தை பிரதமர் கிஷிடாவுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். சிலையின் முன்புறத்தில் தியா னத்தில் இருக்கும் புத்தர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் பின்புறத்தில் போதி மரம் செதுக்கப்பட்டுள்ளது. சந்தன … Read more

ரயில் நிலைய விளம்பரத் திரையில் திடீரென தோன்றிய ஆபாச காட்சிகள்.. அதிர்ச்சியடைந்த பயணிகள்!

பீகாரில், ரயில் நிலைய விளம்பரத் திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள விளம்பர  திரையில் மூன்று நிமிடங்களுக்கு ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானது. இதனைப் பார்த்த பொதுமக்கள் முகம்சுழித்த நிலையில், ரயில்வே நிர்வாகத்திற்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு வீடியோ காட்சியை உடனடியாக அகற்றினர். சம்மந்தப்பட்ட விளம்பர நிறு வனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே, செல்போன்களில் பயணிகள் … Read more

கொரோனா சிகிச்சையில் ஆன்டிபயாடிக் மருந்து பயன்படுத்தக் கூடாது: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு பாக்டீரியா பாதிப்பு இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை தரக்கூடாது என ஒன்றிய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று லேசாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோயாளிகளுக்கு பாக்டீரியா தொற்று இல்லாத பட்சத்தில், லோபினாவிர்-ரிடோனாவிர், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், ஐவர்மெக்டின், மோல்னுபிராவிர், பவிபிராவிர், அசித்ரோமைசின் மற்றும் டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கக் … Read more

என்னடா பண்ணி வெச்சி இருக்கீங்க..! திடீரென ரயில் நிலைய டிவியில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ..!!

பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா ரயில் நிலையத்தில் உள்ளூர் மக்களையும் தாண்டி, ஏராளமான மற்ற மாநில பயணிகளும் அதிகளவில் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று வழக்கம்போல் தங்களது ரயில்களுக்காக பயணிகள் காத்துக்கொண்டிருந்த நிலையில், காலை 9.30 மணியளவில் நடை எண் 10-ல் பொறுத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் விளம்பரத்திற்குப் பதிலாக ஆபாச வீடியோ ஒளிப்பரப்பானது. இதையடுத்து பயணிகள் பலரும், அதனை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து பிளர் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். சில பயணிகள் பதறியடித்துக் கொண்டு அங்கிருந்து … Read more

ஜப்பான் – இந்தியா உறவை மேம்படுத்த ஒப்பந்தம்: பிரதமர் மோடி, பிரதமர் கிஷிடா அறிவிப்பு

புதுடெல்லி: ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அரசு முறை பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு அளித்தார். பின்னர், டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின், இந்திய பயணத்துக்கான வருகை பதிவேட்டிலும் அவர் கையெழுத்திட்டார். … Read more

வரும் 26ந் தேதி காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது எல்விஎம்3 ராக்கெட்

இந்தியாவின் மிகப் பெரிய ராக்கெட்டான எல்விஎம்3 ராக்கெட் வருகிற 26ந்தேதி அன்று 2வது முறையாக வணிகப் பயணத்தை மேற்கொள்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் 26ந்தேதி அன்று காலை 9 மணி அளவில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மற்றும் தேதியையும் இதுதொடர்பான படங்களையும் இஸ்ரோ டுவீட் செய்துள்ளது. ஒன்வெப் நிறுவனத்தின் 5ஆயிரத்து 805 எடையுள்ள 36 செயற்கை கோள்களை … Read more

ஒன்றிய அரசு உத்தரவால் டெல்லி பட்ஜெட் தாக்கல் நிறுத்திவைப்பு: முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒன்றிய அரசு உத்தரவால் டெல்லி பட்ஜெட் தாக்கல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,’ டெல்லி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்வதை நிறுத்தி வைக்கும்படி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சட்டசபையில் இன்று டெல்லி பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது. வரலாற்றில் முதன்முறையாக நமது நாட்டில் ஒரு பட்ஜெட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

டெல்லியில் மகாபஞ்சாயத்து | மத்திய வேளாண் அமைச்சரை சந்தித்த விவசாயிகள் – ஏப்ரல் 30-ல் மீண்டும் கூடப் போவதாக அறிவிப்பு

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி கடந்த ஆகஸ்ட் 9, 2020 முதல் டிசம்பர் 11, 2021 வரை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். டெல்லியின் எல்லைகளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் மத்திய அரசு அந்த 3 சட்டங்களை வாபஸ் பெற்றது. அப்போது, மத்திய அரசால் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனப் புகார் உள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நேற்று கூடியது. இதற்கான ஏற்பாடுகளை சம்யுக்த கிஸான் … Read more

போலி சாதி சான்று தாக்கல் செய்த மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பதவி ரத்து: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் சட்டமன்ற தொகுதி தனித் தொகுதியாகும்.  கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜா போட்டியிட்டு 7,848 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தோல்வியடைந்த காங். கூட்டணி வேட்பாளர் குமார், தேர்தலை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில்  தேவிகுளம் சட்டமன்ற தொகுதி ஒரு தனித் தொகுதி ஆகும். இந்து … Read more

பாப்பம்மாள் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி..!!

டெல்லியில் ஸ்ரீ அன்னம் என்ற பெயரில் சிறுதானியங்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், இலங்கை, சூடான் நாட்டை சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு தபால் தலையையும், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ நாணயத்தையும் வெளியிட்டார். இந்த மாநாட்டில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்மாளும் கலந்து கொண்டார். 107 வயதான … Read more