காவிரி ஆணையம் இன்று கூடுகிறது

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின்  கூட்டம் நடத்த கடந்த டிசம்பர் மாதம் இரண்டு முறை அறிவிக்கப்பட்டும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆணையத்தின் 15வது கூட்டம்  வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.அதில், தமிழகம் உட்பட கேரளா, புதுவை, கர்நாடகா ஆகிய மாநில உறுப்பினர்கள் கலந்து கொண்டு நீர் புள்ளி விவரங்கள் மற்றும் முல்லைப் பெரியாறு, மேகதாது ஆகியவை குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி: வாகன சோதனையில் சிக்கிய ரூ. 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள்

திருப்பதி அருகே பாக்கராபேட்டை மலைப்பாதையில் வாகன சோதனையில் ₹10 லட்சம் மதிப்பிலான 25 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பாக்கராபேட்டை வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை வெட்டி மலைப்பாதை வழியாக கடத்தப்படுவதாக பாக்கராபேட்டை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த மலை பாதையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக வந்த பொலிரோ வாகனத்தை மடக்கியபோது, அது நிற்காமல் சென்றது. இதையடுத்து சற்று தூரத்தில் அந்த வாகனத்தில் இருந்து சிலர் … Read more

‘விற்றோம், விற்கிறோம், விற்போம்’ என்பதைத் தவிர வேறு சாதனை மத்திய அரசிடம்  இருக்குமா? – நவாஸ்கனி கேள்வி

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி.யான கே.நவாஸ்கனி உரையாற்றினார். அதில் அவர், ‘விற்றோம், விற்கிறோம், விற்போம்’ என்பதைத் தவிர வேறு சாதனை மத்திய அரசிடம் இருக்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யும் முஸ்லீம் லீக்கின் மாநிலத் துணைத்தலைவருமான கே.நவாஸ்கனி கூறியதாவது: இந்த அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கம்போல வார்த்தை ஜாலங்களாலும், ஏமாற்றங்களாலும் நிறைந்தே காணப்பட்டதை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். கார்ப்பரேட்டுகளின் … Read more

இந்தியா வரும் சர்வதேச ப.யணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

சர்வதேச அளவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தினந்தோறும் கணிசமாக குறைந்து வருகிறது. இதனையடுத்து கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. இவற்றில் முக்கிய அம்சமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். … Read more

உ.பி.யில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நிறைவு.. 60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்..! <!– உ.பி.யில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நிறைவு.. 60 … –>

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், 60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசச் சட்டமன்றத்திற்கு மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக மேற்கு உத்தரப்பிரதேசத்தின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்கு இயந்திரத்தில் கோளாறுகள் ஏற்பட்டபோதிலும், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக … Read more

ஜம்மு காஷ்மீரில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில் இன்று மதியம் 12.45 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. குல்மார்க்கில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. பிப்ரவரி 5-ம் தேதி 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும், கடந்த 5 நாளில் காஷ்மீரில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது … Read more

ஐஏஎஸ் பணி விதிகளில் மாற்றம் கூடாது திமுக உட்பட 10 கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்

புதுடெல்லி:  ஐஏஎஸ் பணி விதிகளில் மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு திமுக உட்பட 10 கட்சிகள் கடிதம் எழுதி உள்ளன.இது குறித்து மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா கூறுகையில், ”ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி விதிகளில் மாற்றம் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி மாநிலங்களவையில் உள்ள திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட்  கட்சிகள, சிவசேனா உள்ளிட்ட 10 கட்சிகளின் தலைவர்கள், ஓய்வு பெற்ற 38 ஐஏஎஸ் அதிகாரிகள் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை … Read more

வேலைவாய்ப்பின்மை மற்றும் கடன் தொல்லையால் அதிகரிக்கும் தற்கொலைகள்

வேலைவாய்ப்பின்மையால் நாடெங்கும் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் இத்தகவலை தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பின்மையால் தற்கொலைகள் 2018 – 2,841 2019 – 2,851 2020 – 3,548 கடன் தொல்லையால் தற்கொலைகள் 2018 – 4,970 2019 – 5,908 2020 – 5,213 வேலையின்மையில் 2018-ஆம் ஆண்டு 2,841 பேரும் 2019ஆம் ஆண்டு 2,851 பேரும் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2020-ஆம் ஆண்டு இது 3,548 … Read more

மவுலானா ஆஸாத் கல்வி நிறுவனத்தின் சிறுபான்மையினர் உதவித்தொகை ரூ.70 கோடியிலிருந்து வெறும் 1 லட்சமாகக் குறைக்கப்பட்டது ஏன்? – செந்தில்குமார் கேள்வி

புதுடெல்லி: மக்களவையின் திமுக எம்.பி.யான டி.என்.வி.செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், டெல்லியின் மவுலானா அபுல்கலாம் ஆஸாத் கல்வி நிறுவனத்தின் சிறுபான்மையினருக்கான உதவித்தொகையை ரூ.90 கோடியிலிருந்து வெறும் ரூ.1 லட்சமாகக் குறைத்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தருமபுரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான செந்தில்குமார் பேசியதாவது: கடுமையான தொற்று நோய்க்கு பிறகு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொற்று நோய் விளைவாக பல நபர்கள் வேலை … Read more

திடீரென இடிந்து விழுந்த அப்பார்ட்மெண்ட்.. உள்ளேயே சிக்கிய 6 பேர்!

ஹரியானா மாநிலம் குருகிராமில் செக்டார் 109 பகுதியில் உள்ள 22 தளம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் உள்ளேயே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குருகிராமில் செக்டார் 109 பகுதியில் சிண்டெல்ஸ் பாரடைசோ அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 22 தளம் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 530 வீடுகள் உள்ளன; 420 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், இன்று மாலை இந்த குடியிருப்பின் ஆறாவது தளம் இடியத் தொடங்கியுள்ளது. … Read more