சக மாணவிகளை வீடியோ எடுத்து இணையத்தில் கசியவிட்ட மாணவி கைது

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் தனது சக மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள ஒரு நபருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அந்நபர் அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இச்சம்பவத்தைக் கண்டித்து, நேற்று இரவு ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்மந்தப்பட்ட மாணவியைக் கைது செய்துள்ளனர். I humbly request all the students of Chandigarh University … Read more

ரயில்களில் சக பயணிகளுக்கு தொந்தரவு அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ரெயில்வே அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: ரயில்களில் சக பயணிகளுக்கு தொந்தரவு அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  வெகுதூரங்களுக்கு இரவில் பயணம் செய்ய முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் ரெயில் பயணங்களையே விரும்புகின்றனர். காரணம் அமைதியான பயணம், கழைப்பின்மை, தூக்கம் தடைப்படாதது, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களால் இதற்கு முக்கியத்தும் அளிக்கின்றனர். இரவில் ரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு இடையூறு அதிகமாக இருப்பதால் விதி முறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. *பயண விதிகளில் மாற்றம் சமீப காலமாக ஒரு சில … Read more

சண்டிகர் பல்கலை., மாணவிகள் விடுதி வீடியோ கசிவு விவகாரம்: போராட்டத்தால் போலீஸ் குவிப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் சக மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட விவகாரத்தால் அங்கு போராட்டமும் பெரும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவியை போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் பல்கலைக்கழகத்தில் பல மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை போலீஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக மொஹாலி காவல்துறை தலைவர் விவேக் சோனி அளித்தப் பேட்டியில், “இதுவரை நாங்கள் மேற்கொண்ட சோதனையில், குற்றஞ்சாட்டப்பட்ட … Read more

இந்தியாவில் குறையும் அரசால் செய்யப்படும் சுகாதார செலவுகள்!

இந்தியாவில் அரசாங்கத்தால் செய்யப்படும் சுகாதார செலவுகள் தொடர்ந்து கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது. சமீபத்திய தேசிய சுகாதாரக் கணக்கு அறிக்கையின்படி, ஆறு வருட காலப்பகுதியில் அரசாங்க செலவினங்களில் அதிகரிப்பு மற்றும் வீட்டுச் செலவுகள் குறைந்துள்ள போதிலும், நிலையான விலையில் இந்தியாவின் தனிநபர் சுகாதாரச் செலவு கிட்டத்தட்ட தேக்கநிலையில் உள்ளது. அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் அரசாங்க செலவினம் 1.35 சதவீதத்தில் இருந்து 1.28 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த சுகாதாரச் செலவு – … Read more

'பாஜகவுக்கே வேலை செய்கிறார் பிரசாந்த் கிஷோர்' – ஜேடியு தலைவர் குற்றச்சாட்டு!

“பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்காக வேலை செய்கிறார்” என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் ராஜிவ் ரஞ்சன் லாலன் சிங் தெரிவித்து உள்ளார். தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலத்தில் 5 லட்சம் முதல் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கினால் தன்னுடைய ஜன் சூரஜ் அபியான் பிரசாரத்தை வாபஸ் பெற்று நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். இதை அடுத்து, “பிரசாந்த் கிஷோர் ஒரு விளம்பர நிபுணர் என்றும் பாஜகவுக்கு … Read more

ஹாட்ரிக் அடிப்பாரா மோடி? களத்தில் இறங்கிய அமித் ஷா!

மத்திய பாஜக அரசு வலுவான கட்சியாக காலூன்றியுள்ளது. 2014, 2019 மக்களவை தேர்தல்கள் என இரண்டு முறையும் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளதுடன், பல்வேறு மாநிலங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது. எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சூளுரைத்துள்ளார். கடந்த இரண்டு முறை போன்று இல்லாமல், இயல்பாகவே மக்களிடம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசு மீது ஏற்படும் அதிருப்தி உள்ளிட்டவைகளால் 2024 தேர்தல் பாஜவுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும் … Read more

திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி விக்ரகங்கள் 23-ம் தேதி பவனி; இரு மாநில அமைச்சர்கள் முன்னிலையில் நடக்கிறது

தக்கலை : கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறும்   நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி மாவட்டத்தில் இருந்து சாமி விக்ரகங்கள் 23ம் தேதி புறப்படுகிறது. தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மனாபபுரம் இருந்த போது அரண்மனையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது. தற்போது திருவனந்தபுரம் அரண்மனையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கேற்க 22ம் தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்து சேர்கிறது. 23ம் … Read more

’காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான்- ராஜஸ்தான் கூட்டத்தில் தீர்மானம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ராஜஸ்தான் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாத் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் முக்கியமான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் முக்கிய முடிவாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் … Read more

ஹாஸ்டல் மாணவிகளின் வீடியோ லீக் – சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் விடுதி மாணவிகளின் அந்தரங்க வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில், சண்டிகர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் சேர்ந்து மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர், சக மாணவிகளின் அந்தரங்க வீடியோ மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக … Read more

லட்சாதிபதி ஆசையில் 27 லட்சம் பறிகொடுத்த ஜெய்ப்பூர் இளைஞர்

கற்பனை செய்து பாருங்கள், உங்கள் மொபைலில் திடீரென ஒரு செய்தி வருகிறது… அதில் 10 ரூபாய் முதலீடு செய்து பில்லியனர் ஆகுங்கள் என்று செய்தி அனுப்பப்படுகிறது. இதற்கு ஒன்று மட்டும் செய்ய வேண்டும். நீங்கள் பச்சை அல்லது சிவப்பு நிறத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஒரே இரவில் பணக்காரர் ஆகலாம் என்று செய்தி வருகிறது. சில மோசடி பயன்பாடுகள் இது போன்ற பேராசையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதன்படி ஜெய்ப்பூரின் விஜய்யும் இதே வலையில் தற்போது … Read more