ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம்.. உடைந்து விழுந்த வாகனத்தின் பின்பகுதி.. காயமடைந்த பயணிகள்..

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம், சாலையில் வளைந்த போது அதன் பின்பகுதி உடைந்து விழுந்ததில் அதில் பயணித்தவர்கள் காயமடைந்தனர். அம்மாநிலத்தின் நாசிக் அருகே, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சரக்கு வாகனத்தில், சிறுவர்கள், முதியவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வாகனம் வேகமாக வளைந்தபோது, அதன் பின்பகுதி உடைந்து கவிழ்ந்ததில் அதில் இருந்தவர்கள் சாலையில் விழுந்து காயமடைந்தனர். Source link

பாதுகாப்பு படையினருக்கு வீர தீர விருதுகள்- குடியரசு தலைவர் வழங்கினார்.

டெல்லி: முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 2-ம் தொகுதி பாதுகாப்பு விருதுகளை வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கீர்த்தி சக்ரா மற்றும் சௌரிய சக்ரா விருதுகளை அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கினார்.  நிகழ்ச்சியில், அளப்பரிய வீரம், அசாத்திய துணிச்சல், மற்றும் கடமையில் அதீத ஈடுபாடு ஆகியவற்றை வெளிப்படுத்தியதற்காக, பாதுகாப்பு படையினருக்கான வீரதீர விருதுகளும்  வழங்கப்பட்டன. சிறப்பான சேவைக்காக 13 பரம் விசிஷ்டா … Read more

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜூன்-9 வரை அமலாக்கத்துறை காவல்: சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு

டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன்- 9 வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரை ஜூன் 9-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வலது கரமாக செயல்படுவர் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். கடந்த சில மாதங்களாக சத்யேந்தர் ஜெயின் … Read more

கணவரின் காதலியை அறையில் அடைத்து கூலிக்கு ஆள் வைத்து அட்டாக்..! பலாத்கார வழக்கில் சிக்கிய மனைவி

கணவரின் காதலியிடம் சமாதானம் பேசுவதாக வீட்டிற்கு அழைத்து கூலிப்படையினரை ஏவி அந்தப் பெண்ணை பலாத்காரம்  செய்து வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி கூலிப்படையினருடன் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கோண்டாப்பூரை சேந்தவர் காயத்திரி. இவரது கணவர் ஸ்ரீகாந்த் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வருகின்றார். அதே பகுதியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த பெண் ஒருவருடன் ஸ்ரீகாந்துக்கு நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் திருமணம் கடந்த காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி … Read more

சாலையோரம் நின்ற பெண்மணி கொடுத்த பரிசு – திடீரென காரை நிறுத்த சொன்ன பிரதமர்

சிம்லா: மத்திய அரசின் 8 ஆண்டு நிறைவை முன்னிட்டு சிம்லாவில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சிம்லா சென்றார். மாநாட்டிற்குச் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பா.ஜ.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி தனது காரை திடீரென நிறுத்தச் சொன்னார். சாலையோரம் நின்றிருந்த மக்களில் ஒரு பெண்மணி தனது தாயாரான ஹீரா … Read more

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானப்படை அதிகாரி குரூப்கேப்டன் வருண் சிங்கிற்கு சவுர்ய சக்ரா விருது

டெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானப்படை அதிகாரி குரூப்கேப்டன் வருண் சிங்கிற்கு பாதுகாப்புத் துறையில் வழங்கப்படும் 3-வது உயரிய விருதான சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கிய விருதை வருண் சிங்கின் மனைவி தாயார் பெற்றுக்கொண்டனர். வானில் பறந்தபோது கோளாறு ஏற்பட்ட தேஜஸ் போர் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபுவுக்கு முன்ஜாமீன் வழங்கியது கேரள நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபுவுக்கு முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபுவின் புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரித்த படங்களில் நடித்த பெண் நடிகை ஒருவர், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொச்சி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கடந்த ஒன்றரை மாதங்களாக விஜய் பாபுவால் தான் உடல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்ததாக அந்த பெண் விவரித்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் … Read more

“100% பயனாளிகளுக்கு 100% பலன்” – விவசாயிகளுக்கு தவணை நிதி ரூ.21,000 கோடியை விடுவித்த பிரதமர் மோடி உறுதி

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்ற ஏழைகள் நல மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “100% பலன் 100% பயனாளிகளுக்கு சென்றடைய நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம். 100% அதிகாரமளித்தல் என்பது ஒவ்வொரு ஏழையும் அரசின் திட்டங்களின் முழுப் பலனையும் பெறுவதாகும்” என்றார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் மாநில தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்கள், வேளாண் அறிவியல் மையங்களில் … Read more

இந்தியா கேட்டில் 30 அடி உயர சுபாஷ் சந்திரபோஸ் சிலை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்தியா கேட் பகுதியில் அவரது சிலை நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சிலையை அமைப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து பெரிய கருப்பு ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பணிகள் நடைபெற உள்ளது. மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ், இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்குப் பின்னால் உள்ள … Read more

மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவிக்கான சீட் கொடுக்காததால் 2 ஒன்றிய அமைச்சர்களின் பதவிக்கு சிக்கல்?.. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் முடிவால் விரைவில் அமைச்சரவை மாற்றம்..!

டெல்லி: பாஜகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலில் ஒன்றிய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பெயர் இல்லை. அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்பியும், ஒன்றிய அமைச்சருமான ஆர்பி சிங்கிற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர்களது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட் மற்றும் அரியானா ஆகிய … Read more