காதலர் தினத்தில் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ள அழகான வாழ்த்து படங்கள்

உலகம் அன்பால் ஆனது. அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவே அது பரவுகிறது. மனிதர்களை இதயங்களை இணைக்கிறது. அத்தகைய வேலண்டைன்ஸ் தினத்தில், காதலர் தினத்தில், காதலர்கள் மட்டுமல்ல நண்பர்களும் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். அப்படி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ள அழகான அர்த்தமுள்ள வாசகங்கள் அடங்கிய வாழ்த்து படங்களை இங்கே தருகிறோம். காதலர் தினத்தில் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ள வாழ்த்து படங்கள்: “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil” Source link

வேலையில்லா பட்டதாரிகளுக்கு குறுகிய கால இலவச பயிற்சி.!

வேலையில்லா பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் வேலை வாய்ப்பிற்கான இலவச பயிற்சி அடுத்த வாரம் முதல் தொடங்கப்பட உள்ளன. இது தொடர்பாக மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் இணைந்து ஜி.எஸ்.டி. கணக்கு நிர்வாக உதவியாளர், அக்கவுண்ட்ஸ் நிர்வாகி பயிற்சிகள் உள்ளிட்ட குறுகிய கால பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. அம்பத்தூரில் உள்ள மகாகவி பாரதியார் … Read more

ஆட்டோவும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து-3 பேர் பலி <!– ஆட்டோவும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து-3 பே… –>

கோயம்புத்தூரில் அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்த நிலையில், ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். சௌரிபாளையம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ, எதிரில் இருந்து வேகமாக வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பேருந்து மீது மோதிய வேகத்தில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் … Read more

பிப்ரவரி 13: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,36,262 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

“மம்தா போன் செய்து ஆளுநரின் அத்துமீறல் குறித்து கவலை தெரிவித்தார்” – மு.க.ஸ்டாலின் ட்வீட்

மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக துணை நிற்கும் என மேற்குவங்க முதல்வரிடம், தமிழக முதல்வர் உறுதியளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போன் செய்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க ஆளுநர் செயல்பாடு குறித்து பேசினார். அப்போது மம்தா பானர்ஜியிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக துணை நிற்கும் என உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் அதிகாரத்தை … Read more

மு.க ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்ட மம்தா: விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டம்

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அம்மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை முடக்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரித்திருந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அரசிலமைப்பு சட்டத்தின் 174வது பிரிவு மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12ம் தேதி முதல் முடக்கி வைக்க உத்தரவிட்டார். இதனால், மேற்கு வங்க மாநில அரசியலில் … Read more

நாளை முதல் வழக்கம் போல் மின்சார ரயில் சேவை.!

சென்னையில் நாளை முதல் முழு அளவு எண்ணிக்கையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த சூழலில் சென்னை புறநகர் ரயில் சேவை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட அளவில் வழங்கப்பட்டு வந்தன. தற்போது தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், புறநகர் ரயில் சேவையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா காலத்திற்கு … Read more

பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: மேலும் 90 பவுன் நகை சிக்கியது; சீருடையில் இருந்து ரூ.25 ஆயிரமும் பறிமுதல்

நாகர்கோவில்: நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விடிய விடிய நடத்திய சோதனையில் மேலும் 90 பவுன் நகை சிக்கியது. அத்துடன் பணிமுடிந்து வந்த பின்பு வீட்டில் காக்கி சீருடையை சோதனையிட்டபோது அதில் இருந்து ரூ.25 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கண்மணி(52). இவரது கணவர் சேவியர் பாண்டியன் நாகர்கோவில் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் உதவி இயக்குனராக உள்ளார். கண்மணி … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென பெய்தமழையால் காய வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் நனைந்தன. மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்களும் நனைந்தன. இந்தச் சூழலில் தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே … Read more

ஹிஜாப் பிரச்னை; உ.பி தேர்தலுக்கான சதி: திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ் பேச்சு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையில் கண்டனக் கூட்டம் 12.02.2022 ஆம் தேதி மாலை ஐந்து மணி அளவில் முகநூல் நேரலையில் மூலம் நடைபெற்றது.  இதில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியை சேர்ந்த கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தமிழன் பிரசன்னா, மறுமலர்ச்சி … Read more