ஈரானில் தீவிரமடையும் போராட்டம்- இதுவரை 41க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள், அந்நாட்டின் 80 நகரங்களுக்குப் பரவியுள்ள நிலையில், கடுமையாக இதனைக் கையாள அதிகாரிகளுக்கு அதிபர் இப்ராகிம் ரைசி உத்தரவிட்டுள்ளார். இளம் பெண் ஒருவர் போலீசாரின் காவலில் உயிரிழந்ததையடுத்து அங்கு போராட்டங்கள் வலுத்துவருகிறது. பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஐநா கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய அதிபர் ரைசி, வழக்கமான போராட்டங்களை அனுமதிக்கும் அதே நேரத்தில் கலவரங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். ஈரானில் வன்முறையில் ஈடுபட்டதாக … Read more

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் – போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு

போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை கலைத்தனர். தினத்தந்தி Related Tags : Sri Lanka Protest இலங்கை போராட்டம்

ஹிஜாப் விவகாரத்தால் போர்க்களமாக மாறிய ஈரான் – இதுவரை 50 பேர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோர் கைது

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து போர்க்களமாக மாறியுள்ளது. போலீஸ் துப்பாக்கிச்சூடு, தடியடியில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் 9 வயது சிறுமி முதல் முதிர்வயது பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த 13-ம் … Read more

சரிவை நோக்கி செல்லும் சீன பொருளாதாரம்| Dinamalar

‘உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி’ என்பதை போல, சீனாவுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன.கொரோனாவுக்கு முன் இருந்த சீனாவின் வளர்ச்சிக்கும், இப்போதைய நிலைக்குமான வித்தியாசம், அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. இதன் காரணமாக, சீன மக்களின் மனங்களிலும் அண்மைக் காலமாக அதிருப்தி அதிகரித்து வருகிறது.கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக, ஆசிய வளரும் நாடுகள், சீனாவை விட வேகமான வளர்ச்சியை காணும் என, ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.அத்துடன் மேலும் பல மதிப்பீட்டு … Read more

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மெயுலாபோ நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 22 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்தோனேசியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கம் ஆச்சே மாகாணம் முழுவதும் கடுமையாக உணரப்பட்டது. நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் … Read more

தங்கள் நாட்டுடன் இணைக்க உக்ரைனின் லுஹான்ஸ்க் உட்பட 4 நகரங்களில் வாக்கெடுப்பு நடத்தும் ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக ரஷ்யா வாக்கெடுப்பு நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகின்றன. 6 மாதங்களைத் தாண்டி போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. … Read more

3 குழந்தைகளின் தாயை கடத்தி மதமாற்றம்!

கராச்சி : பாகிஸ்தானின் ஹிந்து மதத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டனர். பின், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவருக்கு கட்டாய திருமணமும் செய்து வைக்கப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணம் நசர்பூரில் வசிக்கும் மீனா மேக்வர்,14, என்ற சிறுமி சமீபத்தில் கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டார். பின், முஸ்லிம் இளைஞருக்கு கட்டாய திருமணமும் செய்து வைக்கப்பட்டார். இதேபோல், மிர்புர்காஸ் நகர … Read more

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி நேரில் சந்திப்பு

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது தைவானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவது மிகவும் முக்கியமானது என வாங் யியிடம் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, அமெரிக்கா மிகவும் தவறான, ஆபத்தான சமிக்ஞைகளை அனுப்புவதாக குற்றம் சாட்டியுள்ளது. தினத்தந்தி Related Tags : US Foreign Minister Chinese … Read more

சீனாவில் ராணுவப் புரட்சி | வீட்டுச் சிறையில் அதிபர் ஜி ஜின்பிங்? – சமூக ஊடகங்களில் பரவும் தகவல்

பெய்ஜிங்: சீன அதிபர் பதவியில் இருந்தும், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) தலைவர் பதவியில் இருந்தும் ஜி ஜின்பிங் நீக்கப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. எனினும், சீன அரசு இதை உறுதி செய்யவில்லை. இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டு, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முக்கிய நிலைகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் சற்று தணிந்துள்ளது. சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் … Read more

என்னது? பூமியின் ஏலியன்களா நாம்? அதிர வைக்கும் அறிவியல் ஆராய்ச்சி!

பூமியின் பூர்வீக பிள்ளைகள் இல்லையா நாம்? என்ற கேள்விகளை ஒரு அறிவியல் ஆராய்ச்சியின் முடிவுகள் எழுப்புகின்றன. பூமியில் உயிர்கள் விண்வெளியில் இருந்து வந்திருக்கலாம் என்பதைக் குறிக்கும் சமிக்ஞைகளை ஒரு ஆராய்ச்சிக் கொடுக்கிறது. சிறுகோள் தூசியில் காணப்படும் நீர் ஏற்படுத்தும் சந்தேகங்கள், விஞ்ஞானிகளின் முந்தைய அனுமானங்களை உறுதி செய்வதாக இருக்கிறது. ரியுகு என்ற சிறுகோளில் இருந்து ஹயபுசா-2 ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்ட 5.4 கிராம் பாறைகள் மற்றும் தூசிகளின் பகுப்பாய்விலிருந்து வெளியிடப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்புகள் உள்ளன. … Read more