மிருககாட்சி சாலையில் குரங்குகளின் கையில் அகப்பட்டு அல்லல்பட்ட பெண்மணி.. இணையத்தில் வைரல்..!

மிருககாட்சி சாலையில் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து சேட்டை செய்யும் குரங்கின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குரங்குகள் இருக்கும் கூண்டின் அருகில் சுற்றிப் பார்த்த பெண்ணின் முடியை திடீரென எட்டிப் பிடித்த குரங்கு அதை கண்டபடி இழுத்து சேட்டை செய்தது. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் குரங்கிடம் இருந்து தப்பிய பெண், பதற்றத்தில் மீண்டும் குரங்குகின் கையில் சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.   Source link

மரணதண்டனையை டிவியில் நேரடியாக ஒளிபரப்ப அனுமதி கோரும் நீதிமன்றம்

மரணதண்டனையை நேரலையில் ஒளிபரப்ப சட்டத்தில் மாற்றம் தேவை என எகிப்திய நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை எழுப்பியிருக்கிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றம் எழுதிய கடிதத்தில், “மரண தண்டனையை நேரடியாக ஒளிபரப்புவது, தண்டனை கொடுப்பதற்கான நோக்கத்தை பூர்த்தி செய்யும். இந்த நடவடிக்கை தொடக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே இருந்தாலும், இலக்கை அடைய முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கடிதம் தற்போது சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த வித்தியாசமான கோரிக்கையின் பின்னணியும் ஆச்சரியமானதாக இருக்கிறது. பெண் … Read more

கலிபோர்னியாவில் காட்டுத் தீ: அவசர நிலை அறிவிப்பு| Dinamalar

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக, அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மிட்பைன்ஸ் நகருக்கு அருகிலுள்ள பூங்காவில், ஓக் மரங்களில் சமீபத்தில் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள வனப் பகுதிகளுக்கும் பரவியது.அந்த தீ, 48 சதுர கி.மீ., துாரத்துக்கு பரவி, நேற்று முன்தினம் மிகப்பெரிய காட்டுத் தீயாக மாறியுள்ளது. தற்போது வரை, அதை அணைக்க முடியவில்லை. இதில், அந்த பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள், மரங்கள் எரிந்து சாம்பலாகின. 6,000க்கும் … Read more

100 நாட்களுக்குப் பின் இலங்கை அதிபர் மாளிகை இன்று மீண்டும் திறப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு : இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்கள், 100 நாட்களுக்குப் பின் இன்று (ஜூலை 25) முதல் மீண்டும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.அரிசி, காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உச்சத்தில் உள்ளன. இதனால் கடும் அவதிக்கு ஆளான மக்கள், அரசுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். ராஜினாமா இந்நிலையில் … Read more

இலங்கை அதிபர் மாளிகை எதிரே கூடாரம் போட்டு தங்கியுள்ள மக்கள் போராட்டம் தொடரும் எனப் அதிரடி அறிவிப்பு..!

இலங்கை அதிபர் மாளிகை அருகே தொடர்ந்து முகாமிட்டுள்ள பொதுமக்கள் சிலர் தங்கள் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர். புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதையடுத்துக் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் காலே சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் அதிபர் மாளிகையில் இருந்து நூறு மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இன்னும் சில கூடாரங்களில் போராட்டக்காரர்கள் தங்கியுள்ளனர். Source link

அக்சர் படேல் அதிரடி அரைசதம்; தொடரை வென்றது இந்திய அணி| Dinamalar

போர்ட் ஆப் ஸ்பெயின்: இரண்டாவது ஒருநாள் போட்டியில், அக்சர் படேலின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் விளாசிய சதம் வீணானது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. போர்ட் ஆப் ஸ்பெயினில் 2வது போட்டி நடந்தது. இது, … Read more

போலந்தில் புயல்: மின்சாரம் துண்டிப்பு| Dinamalar

வார்சா : ஐரோப்பிய நாடான போலந்தில், கடும் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக, ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. போலந்தின் கிழக்கு, தெற்கு மாகாணங்களில், நேற்று முன்தினம் கடும் புயலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. மசோவா மாகாணத்தின் வார்சா பகுதி, வெள்ளக் காடாக மாறியது. மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், நகரம் இருளில் மூழ்கியது. இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், ‘புயல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.’மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், … Read more

இரண்டாவது ஆய்வு கூடம்: வெற்றிகரமாக ஏவியது சீனா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : சீன விண்வெளி ஆய்வு நிலையத்தின் இரண்டாவது ஆய்வுக் கூடத்தை, அந்நாட்டு விஞ்ஞானிகள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவினர். அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. சீனா தனித்து, ‘டியாங்காங்’ என்ற சர்வதேச ஆய்வு மையத்தை விண்வெளியில் அமைத்து வருகிறது. இதன் பிரதான ஆய்வுக் கூடம், ‘டியான்ஹி’ என்றும், கூடுதலான இரண்டு துணை ஆய்வுக்கூடங்கள், ‘வென்ஷியான்’ மற்றும் ‘மெங்ஷியான்’ … Read more

பிலிப்பைன்சில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி| Dinamalar

மணிலா : பிலிப்பைன்சில் பல்கலைக்கழக வாசல் அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலையில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது, பல்கலை வாசல் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த திடீர் தாக்குதலில், லமிடன் நகர முன்னாள் மேயர் ரோசிட்டா புரிகே, அவரது உதவியாளர் மற்றும் பல்கலை காவலாளி ஆகிய மூவரும் குண்டு பாய்ந்து அதே … Read more

மத்திய தரைக்கடலில் குடிநீர் கூட இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருந்த 428 பேர் மீட்பு..!

மத்திய தரைக்கடலில் படகில் தத்தளித்துக்கொண்டிருந்த புலம்பெயர்ந்தவர்கள் 428 பேரை ஜெர்மன் தொண்டு நிறுவனமான சீ-வாட்ச் மீட்டது. அதிக அளவிலான எண்ணிக்கையில் குடிநீர் கூட இல்லாமல் கடும் வெயிலில் இருந்த அவர்களை உளவு விமானம் கண்டறிந்து சீ-வாட்ச் தொண்டு நிறுவனம் நடத்தும் மீட்பு கப்பலுக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து நான்கு வெவ்வேறு மீட்பு நடவடிக்கைகள் மூலம் மூன்று கப்பல்களில் அவர்கள் மீட்கப்பட்டனர்.  Source link