அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஹெம்ப்ஸ்டெட்நகரில் உள்ள லிடோ கடற்கரையில் நேற்று முன்தினம் காலை ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு திமிங்கலம் உயிருடன் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மீட்பு குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திமிங்கலத்தை மீட்டு கடலுக்குள் விடுவதற்காக அங்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் திமிங்கலம் செத்தது. இதனையடுத்து, மீட்பு குழுவினர் 35 அடி நீளம் கொண்ட அந்த ராட்சத திமிங்கலத்தை … Read more

இந்த ரணகளத்திலேயும்… அதானி வாங்கிய மிகப்பெரிய துறைமுகம் – எவ்வளவு தெரியுமா?

வணிக நிறுவனமான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இஸ்ரேலின் மிகப்பெரிய சர்வதேச துறைமுகங்களில் ஒன்றான ஹைஃபா துறைமுகத்தை கையகப்படுத்தியுள்ளார். அந்த வகையில், இஸ்ரேலில் தொடர்ந்து அவர் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதானி போர்ட்ஸ் (APSE.NS) மற்றும் உள்நாட்டு இரசாயனங்கள் மற்றும் தளவாட நிறுவனமான கடோட் ஆகியவை இணைந்து 4 பில்லியன் ஷெக்கல்கள் (1.15 பில்லியன் அமெரிக்க டாலருக்கு) இந்த துறைமுகத்தை வாங்கியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 9,658 கோடியாகும்.  ஹைஃபா துறைமுகத்தை வாங்கியதை அடுத்த … Read more

விமானத்தில் அரை நிர்வாணம்: இத்தாலி பெண் அதிரடி கைது| Italian woman walks semi-naked on Air Vistara flight, abuses cabin crew – airline issues statement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: அபுதாபியில் இருந்து, மும்பைக்கு வந்த விமானத்தில் அரை நிர்வாண கோலத்தில் அடாவடியாக நடந்து கொண்டதுடன், விமான ஊழியர்களை தாக்கிய இத்தாலி பெண்ணை, மும்பை போலீசார் கைது செய்தனர். சமீபத்தில், ‘விஸ்தாரா’ விமானம், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் இருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்தபோது, ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த பவோலா பெருச்சியோ, 45, என்ற பெண் அடாவடியாக நடந்து கொண்டார். … Read more

ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல்: மன்னிப்பு கோரினார் இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா

கொழும்பு, கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு தாக்குதலில் 270-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் 11 இந்தியர்களும் அடங்குவர். அந்த தாக்குதலை தடுக்க தவறிவிட்டதாக அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா மீதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் கடந்த 12-ந்தேதி இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக சிறிசேனா இலங்கை மதிப்பில் ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இல்லாவிட்டால் … Read more

13 மணிநேரப் பயணத்திற்கு பின் புறப்பட்ட இடத்திலே தரையிறங்கிய விமானம்

துபாயிலிருந்து நியூசிலாந்துக்கு சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம், 13 மணிநேர பயணத்திற்குப் பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதால், பயணிகள்  அவதிக்குள்ளாகினர். துபாயில் இருந்து கடந்த ஜனவரி 27ந் தேதி புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், ஆக்லாந்து நகரில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக மீண்டும் திருப்பி விடப்பட்டது. சற்று நேரத்தில் தரையிறங்குவோம் என எதிர்பார்த்துக் காத்திருந்த பயணிகள், மீண்டும் துபாயிலேயே கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர். Source link

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு; 10 பேர் படுகாயம்

வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடக்கும் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவங்கள் அந்த நாட்டை அதிரவைத்து வருகிறது. கடந்த 23-ந் தேதி கலிபோர்னியா, அயோவா மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் ஒரே நாளில் நடந்த வெவ்வேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள லேக்லேண்ட் நகரில் அயோவா அவென்யூ என்கிற இடத்தில் மக்கள் … Read more

முக்கிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து அமெரிக்கா-இந்தியா பேச்சுவார்த்தை

தொழில்நுட்பத் துறையில் சீனாவுக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளன. முக்கியமான தொழில்நுட்பத்துறையின் முன்னேற்றத்தை இந்தியாவுடன் பகிர்ந்துக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை இந்தியா-அமெரிக்க அதிகாரிகள் இடையே இந்த வாரத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டில் பிரதமர் மோடியும் அதிபர் ஜோ பைடனும் சந்தித்துப் பேசிய பின்னர் இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நட்பும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அணு ஆயுதங்களை தாங்கும் ஏவுகணைகளையும், ஜெட் விமானங்களையும் விண்கலன்களையும் இயக்கப் பயன்படும் முக்கியமான மைக்ரோ சிப்களையும் தொழில்நுட்பத்தையும் … Read more

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்- பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளிட்டவை அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. அந்த பகுதியில் உள்ள போலீசார், ராணுவ வீரர்கள், வெடிகுண்டு செயலிழிப்பு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் இந்த மசூதியில்தான் தொழுகை நடத்துவார்கள். எனவே 4 அடுக்கு பாதுகாப்பை கடந்துதான் இந்த மசூதிக்கு செல்ல முடியும். இந்த நிலையில் நேற்று மதியம் இந்த மசூதியில் வழக்கம் போல் தொழுகை … Read more

ஆஸ்திரேலியாவில் உள்ள கோயில் மீது தாக்குதல் – இந்திய தூதர் கண்டனம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ள பல கோயில்களில் சமீப காலமாக தாக்குதல் நடத்தப்படுகின்றன. இந்த விஷயத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கோயில்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசை இந்திய அரசு வலியறுத்தி வருகிறது. இந்நிலையில், மெல்போர்ன் நகரில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலில் காலிஸ்தான் பிரி வினைவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும் கோயில் சுவர் களை சேதப்படுத்தி, காலிஸ்தான் ஆதரவு படங்கள், வாசகங்களை எழுதினர். இந்தத் தாக்குதலில் சிலர் காயம் அடைந்தனர். … Read more

கட்டுக்கட்டாக ஊழியர்களுக்கு போனஸ் தொகை கொடுத்த சீன நிறுவனம்

உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு கட்டுக்கட்டாக போனஸ் தொகையை வழங்கி இருக்கிறது. ஹெனான் மாகாணத்தில் இயங்கிவரும் ஹெனன் மைன் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா மற்றும் உலக மந்தநிலை காரணமாக சீனாவும் பொருளாதார நெருக்கடியில் இருந்துவரும் வேளையில், ஹெனன் மைன் நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான்-ஆக அதிகரித்திருக்கிறது. இதனால், அந்நிறுவனம் பணத்தை மலை போல குவித்து வைத்து … Read more