அவ்வளவு பயமிருக்கில்ல.. அப்புறம் ஏன் காப்பாத்தனும்..? அப்படியே தூக்கி போட்ட குரூப்..! விபரீத விலங்கு நேசர்கள்..!

தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் தகர டின்னுக்குள் தலைசிக்கிக் கொண்டதால் அவதிப்பட்ட கரடியை, போராடி மீட்ட வாகன ஓட்டிகள், சீறிய கரடியிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள அலறியடித்துக் கொண்டு ஓடிய சம்பவத்தின் வீடியோ  வெளியாகி உள்ளது. உதவி செய்வதே சில சமயங்களில் உபத்திரம் ஆகிவிடும் என்பார்கள் அது போன்ற தொரு சம்பவம் சைபீரியாவில் அரங்கேறி இருக்கிறது. அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் பெட்ரோல் டின்னுக்குள் தலை சிக்கிய நிலையில் கரடி ஒன்றை கண்ட விலங்கு நேசர்கள் சிலர் அதன் … Read more

உக்ரைனின் ராணுவ ஆயுதக்கிடங்கை கலிப்ர் கப்பல் ஏவுகணைகளால் தாக்கி அழித்ததாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் உள்ள ராணுவ ஆயுதக்கிடங்கை கலிப்ர் கப்பல் ஏவுகணைகளால் தாக்கி அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனின் MiG-29 போர் விமானத்தையும், Mi-24 ஹெலிகாப்டரையும் ரஷ்ய வான் பாதுகாப்புப்படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ்  தெரிவித்துள்ளார்.   Source link

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் தெரியும் 'மனிதனின் கண்' – புகைப்படம் வெளியிட்ட விஞ்ஞானிகள்

பாரிஸ், நமது சூரிய குடும்பத்தில் பூமியை தவிர வேறு எந்த கிரகங்களிலும் மனிதர்களால் ஒரு சில வினாடிகள் கூட உயிர்வாழ முடியாது. ஆனால், செவ்வாய் கிரகம் மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது. அங்குள்ள வெப்பம், பருவநிலை மாற்றம், ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல அம்சங்கள் நமது பூமிக்கு சற்றே நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சிக்கு உலகின் பல்வேறு நாடுகள் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து வருகின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு … Read more

இலங்கையில் மீண்டும் நெருக்கடி: இனி ரேஷன் முறையில் பெட்ரோல்- டீசல்: அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை

கொழும்பு: இலங்கையில் வாரந்தோறும் முன்பதிவு செய்பவருக்கு மட்டும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் புதிய நடைமுறை அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டின் மின்சக்தி, எரிசக்தித்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கு வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய … Read more

பிரதமருக்கு மீண்டும் கொரோனா… அச்சத்தில் பொதுமக்கள்!

மூன்றாவது அலையுடன் கொரோனா ஓய்ந்துவிட்டதாக உலக மக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது. கொரோனா நான்காவது அலை வந்துவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு, உலக அளவில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமானியர்கள் தொடங்கி விஐபிகள் வரை அனைத்து தரப்பினரையும் கொரோனா ஒருவழி செய்து வருகிறது. இந்த நிலையில், தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக … Read more

தன்னை விட உருவத்தில் பெரிய பாம்பை விழுங்கிய ராஜநாகம்..

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் ராஜநாகம் ஒன்று தன்னை விட உருவத்தில் பெரிய விஷப்பாம்பு ஒன்றை விழுங்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அளவில் பெரிய அந்த விஷப்பாம்பை ராஜநாகம் படிப்படியாக விழுங்கும் காட்சியை 80 வயது முதியவர் ஒருவர் படம்பிடித்துள்ளார். இந்த காட்சிகளை இணையதளங்களில் ஏராளமானோர் பார்த்து வருகின்றனர். Source link

"அணு ஆயுத சோதனை; வடகொரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்" – அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் தென் கொரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி பார்க் ஜின் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆண்டனி பிளிங்கன், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி 7-வது அணு ஆயுத சோதனைக்கு வட கொரியா தயாராகி வருவதாக அமெரிக்க ராணுவம் எச்சரித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் வட கொரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கொரிய தீபகற்பத்திலும், உலகிலும் அமைதியை நிலைநாட்டுவதே தங்கள் … Read more

‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ கட்டுரையை எழுதிய எழுத்தாளருக்கு கணவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை

ஒரேகான்: ‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ (how to murder your husband) என்ற கட்டுரையை எழுதிய நாவலாசிரியான நான்சி என்பவருக்கு, கணவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியர் நான்சி கிராம்ப்டனின் கணவர் டேனியல் புரோபி சமையல் கலை நிபுணராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நான்சியும், டேனியல் புரோபியும் நிதி நெருக்கடியில் தவித்து வந்துள்ளனர். கடன் பிரச்சினையிலும் சிக்கினர். இந்த நிலையில் கணவர் டேனியல் புரோபி பெயரில் … Read more

இலங்கை நிலை தான் பாகிஸ்தானுக்கும்.. – நிதி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!

பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லையென்றால் இலங்கையை போன்ற நிலை பாகிஸ்தானுக்கு ஏற்படும் என, அந்நாட்டு நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு அடுத்து பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியிடம் கடன் வாங்க பாகிஸ்தான் அரசு … Read more

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத்தீ – 5 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்

வாஷிங்டன், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பிளாக்ஸாடாஃப் பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் கடந்த வார இறுதியில் பற்றிய காட்டுத்தீ, தொடர்ந்து எரிந்து வருகிறது. மேலும் பலத்த காற்று காரணமாக இந்த தீ வேகமாக பரவி வருகிறது. அங்கு நெருப்பு பரவி வரும் பகுதிகளில் இருந்து இதுவரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 5 ஆயிரம் ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடைக்காலத்தில் ஏற்படும் கடுமையான வெப்பம் காரணமாக இந்த தீ … Read more