நிதி அமைச்சர் பதவி பறிப்பு – பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடி!

பிரிட்டன் நிதி அமைச்சர் குவாஸி குவார்டங் பதவியை பிரதமர் லிஸ் டிரஸ் பறித்துள்ளார். பிரிட்டன் புதிய பிரதமராக உள்ள லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் இத்திட்டத்திற்கு சொந்த கட்சி எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் … Read more

உக்ரைன் வீசிய ஏவுகணைகள்; சின்னாபின்னமானது ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்தும் இன்னமும் முடிந்தபாடில்லை. இதனால், அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டியபடி ரஷ்யா அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை ரஷ்யா படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்களில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதில் உக்ரைன் படைகள் தீவிரமாக உள்ளன. இதற்கிடையே போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டு ரஷ்யா பொதுவாக்கெடுப்பு நடத்தியது. ஓபிஎஸ் மகனுக்கு திடீர் … Read more

பீகாங் ஆற்றில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் பலி

கம்போடியாவில் பீகாங் ஆற்றில் படகு மூழ்கிய விபத்தில், 8 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் மாயமாகினர். விபத்தில் சிக்கிய  இரண்டு படகோட்டிகள் மற்றும் 2 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  பள்ளி குழந்தைகள்  படகில்  வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, படகில் பாரம் அதிகமாக இருந்ததால் ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.  Source link

கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கிய பேருந்து.. 11 பேர் உயிரிழப்பு..

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், கண்ணி வெடி தாக்குதலில் பேருந்து வெடித்து சிதறியதில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல வருடங்களாக நீடித்து வரும் வன்முறையில், கண்ணி வெடி தாக்குதலில் இந்தாண்டு ஆகஸ்டு மாதம் வரை   சுமார் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.  Source link

துபாயில் பார்வையாளர்களுக்கு வழிகாட்டவும், பல மொழியில் பேசவும் வடிவமைக்கப்பட்ட ரோபோ…

துபாயில் உள்ள புயூட்சர் அருங்காட்சியகத்தில், மிகவும் மேம்படுத்தப்பட்ட மனித உருவ ரோபோவை, ஊழியராக பணியமர்த்தியுள்ளனர். பல மொழிகளில் பேசும் திறனுடைய Ameca எனப்பெயரிடப்பட்ட இந்த ரோபோ, பார்வையாளர்களுக்கு வழிகாட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த ரோபோ பெண் ஊழியருடன் கலந்துரையாடும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.  Source link

வெள்ளை மாளிகை வன்முறை – டொனால்டு ட்ரம்ப் ஆஜராக சம்மன்!

அமெரிக்க வெள்ளை மாளிகை வன்முறை விவகாரத்தில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். அதிபர் தேர்தல் தோல்வியை தாங்காத முடியாத டாெனால்டு ட்ரம்ப், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு வன்முறையை ஏற்படுத்தினார். அமெரிக்க … Read more

Video: பெண்ணின் கண்ணில் 23 லென்ஸ் – வரிசையாக வெளியே எடுத்த மருத்துவர்கள் – அது எப்படி…?

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, இன்ஸ்டாகிராமில் கேடரினா குர்தீவா என்ற அமெரிக்க கண் மருத்துவர், வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். ஒரு மாதத்திற்கு முன் போட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த வீடியோவில், தன்னிடம் சிகிச்சை பெற வந்த பெண்ணின் கண்ணில் இருந்து, வரிசையாக 23 காண்டாக்ட் லென்ஸ்களை கேடரீனா வெளியே எடுப்பது பதிவாகியுள்ளது.  மேலும் படிக்க | உல்லாசத்தால் உச்சம் தொட்ட மோசடி ராணி… பொறியில் சிக்கிய அரசியல் எலிகள் – யார் … Read more

வெடிகுண்டு தாக்குதல் 18 சிரிய வீரர்கள் பலி| Dinamalar

பெய்ரூட் : டமாஸ்கஸ் புறநகரில் பஸ்சில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிரிய ராணுவ வீரர்கள் 18 பேர் உயிர்இழந்தனர். காயம் அடைந்த 27 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்காசிய நாடான சிரியாவின் டமாஸ்கஸ்நகரம் அருகே ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 18 வீரர்கள் அதே இடத்தில் உயிர்இழந்தனர். காயம் அடைந்த 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பெய்ரூட் : … Read more

அமெரிக்கா வந்த பாக்., நிதியமைச்சருக்கு எதிராக திருடன், திருடன் என கோஷம்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்கா வந்த பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர்ரை பார்த்து, ” திருடன்” மற்றும் ” பொய்யர்” என அடையாளம் தெரியாத சிலர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகிறது. இதனையடுத்து சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாடு நாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேச அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தர், அமெரிக்கா வந்தார். வாஷிங்டன் விமான நிலையத்திற்கு, உதவியாளர்களுடன் … Read more

ஆப்கனில் கல்லூரி நுழைவுத்தேர்வு எழுத பெண்களுக்கு தாலிபன்கள் அனுமதி..!

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதன்முறையாக, பல்கலைக்கழக நுழைவு தேர்வில் பங்கேற்க, பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆப்கனில் பெண்கள் கல்வி கற்பதற்கு, தாலிபன்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில், காபூல் பல்கலைக்கழகத்தில் நுழைவு தேர்வு எழுதுவதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று முதன்முறையாக அனுமதிக்கப்பட்டனர். தலைநகர் காபூலில் கடந்த மாதம் பயிற்சி மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 53 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது. Source link