டிரம்பின் டுவிட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் – எலான் மஸ்க்

வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய டுவிட்டர் உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக 70,000க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, டுவிட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டரை பயன்படுத்த டொனால்ட் டிரம்பிற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனக்கூறி இருந்தார். இதனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் டுவிட்டரை … Read more

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல் மாஜி சர்வாதிகாரி மகன் வெற்றி| Dinamalar

மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபரும், சர்வாதிகாரியுமான மறைந்த மார்க்கோஸ் மகன் ஜூனியர் மார்க்கோஸ் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது. இதையடுத்து நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் ஜூனியர் மார்க்கோஸ், மூன்று கோடிக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை எதிர்த்து போட்டியிட்ட துணை அதிபர் லெனி ரோப்ரெடோ, 1.45 கோடி ஓட்டுகள் பெற்றுள்ளார். தேர்தல் வெற்றி குறித்து … Read more

மக்கள் அமைதி காக்க வேண்டும், வன்முறையை கைவிடுமாறும் – அதிபா் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்

கொழும்பு, இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு அதிபா் கோத்தபய ராஜபக்சேவின் அரசே காரணம் எனக்கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.  கொழும்புவில் நடைபெற்று வந்த போராட்டமானது வன்முறையாக மாறி நாடு முழுவதும் பரவியது. இதனையடுத்து மக்கள் அமைதி காக்குமாறும் வன்முறையை நிறுத்துமாறும் அதிபா் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளாா். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருதாகவும், ஒருமித்த கருத்து மூலம் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாகவும் அதிபா் அதிபா் கோத்தபய ராஜபக்சே தனது டுவிட்டா் … Read more

பதற்றம் எதிரொலி – இலங்கையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு

கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.   அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலகவேண்டும் என அவர்கள் வலியறுத்தினர். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கு இடையே நேற்று ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.  இதில் மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ … Read more

இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரை. காணவில்லை!| Dinamalar

கொழும்பு :இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ஆளுங்கட்சியினருக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிறுவனங்களை மக்கள் தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருவதை அடுத்து, மகிந்த மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். ‘அவர்களை காணவில்லை’ எனக் கூறப்பட்ட நிலையில், திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் அவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால், அங்கு … Read more

திருகோணமலையிலிருந்து சோபர் தீவுக்கு தப்பியோடிய மகிந்த ராஜபக்சே குடும்பம் ! வைரலாகும் ஆடியோ

கொழும்பு, இலங்கை முழுவதும் கொந்தளிப்பாக காணப்படும் சூழலில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் சொகுசு வீட்டை விட்டு அவர் வெளியேறினார். இந்நிலையில் மகிந்த ராஜபக்சே, அவரது மனைவி, ஒரு மகன் மற்றும் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை திருகோணமலை கடற்படைத் தளத்தை வந்தடைந்தனர். அவர்கள் கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களால் … Read more

ஓய்வு பெற உள்ளாரா ராணி இரண்டாம் எலிசபெத்?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற உள்ளதால் படிப்படியாக தனது பொறுப்புகளை இளவரசர் சார்லஸ் இடம் அளித்து வருகிறார் என கூறப்படுகிறது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்(96) வயது மூப்பு காரணமாக தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள சிரமப்படுகிறார். இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக தனது அதிகாரத்தை இளவரசர் சார்லஸ் இடம் மாற்றி வருகிறார். இதன் முதல் படியாக ஆண்டுதோறும் பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஹவுஸ்ஸ் … Read more

போர் முனையில் 200 கண்ணிவெடிகளை கண்டறிந்த பேட்ரனுக்கு பதக்கம் வழங்கி கவுரவம்

கீவ், உக்ரைன் நாட்டின் மீது 9 வாரங்களுக்கும் மேலாக ரஷியா தொடுத்துள்ள போர் நீடித்து வருகிறது.  ரஷிய படையெடுப்பினை முன்னிட்டு உக்ரைனில் பதுக்கி வைக்கப்படும் கண்ணிவெடிகளை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. இதில் ஜாக் ரஸ்செல் வகையை சேர்ந்த பேட்ரன் என பெயரிடப்பட்ட இரண்டரை வயது மோப்ப நாய் ஒன்று திறமையாக செயல்பட்டு வருகிறது.  இதுவரை உக்ரைனில் 200 கண்ணிவெடிகளை மோப்பம் பிடித்து கண்டறிந்து உள்ளது. வீரர்களை கவுரவிக்க நடந்த பாராட்டு விழாவில் பேட்ரன் மற்றும் அதன் … Read more

40 இடங்களில் சி.பி.ஐ., ரெய்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : விதிகளை மீறி வெளிநாட்டு நன்கொடை பெற்றுத்தந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ., தயாராகி வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை அடுத்து, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால், வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. … Read more