மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனர் பரிதாப பலி

மத்திய மும்பையில் உள்ள தாராவி பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆட்டோ ஓட்டுனர் அமீர் அனிஸ் கான் (30) குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆட்டோ ஓட்டுனரை மீட்டு அங்குள்ள சியோன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  அனிஸ் கான் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும படியுங்கள்.. கைதிகளுக்காக எப்.எம். ரேடியோ- இந்தூர் மத்திய சிறையில் புதிய முயற்சி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.