மகன் இறந்த துக்கம் தாங்காமல் கணவன்-மனைவி இருவர் உடலில் துணியை கட்டிக்கொண்டு ராமேஸ்வரம் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்தவர்கள் கோவை மாவட்டம் சமத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி என்பது தெரியவந்தது.
இதனிடையே தங்களது சொத்துக்களை விற்று மகன் பெயரில் அறக்கட்டளை தொடங்குமாறு இறப்பதற்கு முன்பு உறவினர்களுக்கு அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.