திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு காவல் நிலைய எல்லைக்கட்பட்ட கீழச்சேரி பகுதியில் அரசு உதவி பெறும் திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியின் விடுதியில் தெக்களூர் பகுதியை சேர்ந்த சரளா என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவி, இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி தற்கொலை செய்து கொண்டதை சக மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் அளித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் சார்பாக உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனை அடுத்து, மப்பேடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவிகள் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், மாணவியின் சொந்த ஊரான தெக்களூர் கிராமத்தில், மாணவியின் பெற்றோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயத்தில் கீழச்சேரி பள்ளி வளாக மெயின் கேட்டில் மற்ற மாணவிகளின் பெற்றோர்களும் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் பிள்ளைகளின் நிலைமை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.