பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு| Dinamalar

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவ மழை துவங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு லேசான மழை பெய்ந்தது. பின் கடந்த சில தினங்களாக பருவ மழை தீவிரமடைந்தது. இந்நிலையில், தொடர்மழையால் குட்டிகானம், தொடுபுழா உள்ளிட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனமழையால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போய் உள்ளதாகவும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் நேற்று (ஆக.,2) தெரிவித்து இருந்தார். மேலும் இரண்டு வயது குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

10 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட் ‘

கேரளா மாநிலத்தில் ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் இடுக்கி ஆகிய 10 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.