தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.25-ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: ‘தீபாவளி பண்டிகை இன்று (திங்கள்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்பும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு ஏதுவாக நாளை (அக்.25-ம் தேதி) ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பா் 19-ம் தேதி பணி நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.