உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் நகரத்தில் நேற்றைய தினம் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லட்சக்கணக்கில் பணம் நஷ்டமாகியுள்ளது.
18 பேர் வரை பணம் எடுத்த போது, தொழில்நுட்ட கோளாறில் இருந்து ஏடிஎம் இயந்திரம் 100 ரூபாய் எடுக்க முயன்றவர்களுக்கு 500 ரூபாயை கொடுத்துள்ளது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் பணம் நஷ்டமாகியுள்ளது.
இதனை தொடர்ந்து ஒரு வாடிக்கையாளர் ஏடிஎம் இயந்திர கோளாறு குறித்து வங்கியில் புகார் அளித்துள்ளார். அங்கு விரைந்த அதிகாரிகள் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதில் 5 பேரை வங்கி அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அந்த இயந்திரத்தில் 500 மற்றும் 2000 நோட்டுகள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தன. வாடிக்கையாளர்கள் எடுத்துச் சென்ற அதிக தொகையை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.