திருவனந்தபுரம் பாறசாலையில் அமைந்துள்ள முறியங்கரை கிராமத்தில் வசித்து வருபவர் சுதிர் (49). கேரளா அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சாந்திக்கும், முருகன் என்பவருக்கும் இரகசிய உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் சுதிர் வீட்டில் சாப்பிடும் போதெல்லாம் ஏதாவது உடல்நலக்கோளாறு ஏற்பட்டு வந்துள்ளது. அதிலும் தலைவலி அதிகமாக காணப்பட்டு வந்துள்ளது. இதனால் சுதிர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்படி ஒருநாள் தான், மனைவி கொடுத்த ஹார்லிக்ஸை சுதிர் குடித்துள்ளார். அப்போது அவரது உடல்நலம் மிகுந்த மோசமான நிலையில் இருந்துள்ளது. மேலும் தலைவலியும் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே இவருக்கு சுமார் 3 நாட்கள் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை சரியாகியுள்ளது. கணவனுக்கு உடல்நலம் குணமான பிறகு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு கடும் வாக்குவாதம் மாறியது.
இதனால் கோபமடைந்த மனைவி சாந்தி, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு வீட்டில் தனியாக இருந்த சுதிர், கடை உணவை உண்டு வந்துள்ளார். அப்போது அவரது உடல்நலத்தில் எந்த வித கோளாறும் காணப்படவில்லை. மேலும் மனைவி சென்ற சில மாதங்களில் வீட்டிற்கு வரவில்லை என ஆத்திரத்தில், சாந்தியின் உடைகளை தூக்கி ஏறிவதற்காக அவரது பீரோவில் இருந்து எடுத்துள்ளார்.
அப்போது அதில் துணிகளுக்கு இடையே அலுமினியம் பாஸ்பைட் விஷம் மற்றும் ஒரு சிரிஞ்ச் இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தான் மருத்துவமனையில் இருந்து பெற்ற தனது ரிப்போர்ட்டை எடுத்து பார்க்கையில் அவரது உடலில் அலுமினியம் பாஸ்பைட் கலந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த சுதிர், தனது மனைவி தான் தன்னை கொள்வதற்கு ஸ்லோ பாய்சன் கொடுத்துள்ளார் என்பதை கண்டறிந்தார்.
மேலும் தனது மனைவிக்கு கொரியர் மூலம் இந்த விஷத்தை அவரது காதலன் முருகன் தான் அனுப்பிவைத்துள்ளார் என்பதற்கான ஆதாரத்தையும் சுதிர் அளித்துள்ளார். இதையடுத்து தற்போது இந்த வழக்கு குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை கொல்ல ஹார்லிக்ஸில் விஷத்தை கலந்து மனைவி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.