பிரியாணி கேட்டு சண்டையிட்ட மனைவி எரித்துக் கொலை!!

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த கருணாகரன் (75) என்பவர், 65 வயது மனைவி பத்மாவதியுடன் வாழ்ந்து வந்தார். தனியே வாழ்ந்து வரும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி மனஸ்தாபம் ஏற்பட்டு வந்துள்ளது.

இருவருக்கும் மனநிலை சற்று பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று முதியவர் கருணாகரனுக்கு பிரியாணி சாப்பிட வேண்டும் என்பது போல் இருந்துள்ளது.

தன்னிடம் இருந்த பணத்தை வைத்து அவர் மட்டும் பிரியாணி சாப்பிட்டு வந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த இவர், தான் வெளியில் பிரியாணி சாப்பிட்டு வந்துவிட்டதாகவும், தனக்கு சாப்பாடு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கோபப்பட்ட மூதாட்டி பத்மாவதி, தனக்கு தராமல் பிரியாணி சாப்பிட்டு வந்ததற்காக தனது கணவனுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முதியவர் தனது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துள்ளார்.

அலறி துடித்த மூதாட்டி தனது கணவனையும் கட்டியணைத்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். தீக்காயங்களுடன் கிடந்த அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.