இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல..!! தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!!

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வகையில் ஒவ்வொன்று மீதும் தனி ஈர்ப்பு இருக்கும். அது போல பெண்கள் என்றாலே நினைவுக்கு வருவது ஆபரண தங்க நகைகள் தான். அதுவும் குறிப்பாக வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சுப காரியங்களுக்கும் பெண்கள் ஆசையாக தங்க நகைகளை அணிந்து கொள்வது என்பது நமது தமிழ்நாட்டு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.

இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்த வண்ணம் உள்ளது.. நவம்பர் 01 ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 4,730 ஆக இருந்த நிலை இன்று நவம்பர் 15 ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 4940 ஆக உள்ளது. ஒரு கிராமிற்கு 210 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 1700 வரை உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,520-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 39 ரூபாய் உயர்ந்து, ரூ.4,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ரூ.68,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.