கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியைச் சேர்ந்த வடிவேல் முருகன் (32) ஒரு கட்டுமான தொழிலாளி. இவருக்கும் சுஜா(24) என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன் திடீரென வீட்டில் நினைவிழந்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் சிகிச்சையில் நலம் பெற்று வீடு திரும்பினார். மீண்டும் சில நாள்கள் கழித்து வடிவேல் முருகனுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மனைவி சுஜாவின் செயல்பாடுகள் முருகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சுஜாவுக்கு அவரின் முன்னாள் காதலருக்கும் இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது வடிவேல் முருகனுக்கு தெரியவந்தது.
மனைவியின் செல்போனை கண்காணித்ததில் வாட்ஸ் அப் சாட்டில் பல அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது. அதில் இருந்து தனது மனைவி தனக்கு விஷம் கொடுத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கருதி வடிவேல் முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான சுஜாவை தொடர்ந்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சுஜா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உடலில் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் உடல்நிலை நன்றாக உள்ளது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
newstm.in