உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்திற்கு மீண்டும் கனமழை அலெர்ட்..!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, வரும் 19ம் தேதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

அதற்கடுத்த 3 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (நவ.19-ம் தேதி) வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 20-ம் தேதி செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 21-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.