சென்னையில் தடையை மீறி ஆர்.எஸ்.எஸ் கூட்டம்!!

சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் தடையை மீறி ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனை துணை அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், ஆர்.எஸ்.எஸ் தேசிய இணை பொதுச்செயலாளர் அருண்குமார் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்கள் பள்ளிகளில் நடத்த அனுமதி இல்லை என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் அண்ணா நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா விவேகானந்தர் பள்ளியில் ஆர் எஸ் எஸ் இன் இரண்டாவது நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ்.தென்மண்டல முக்கிய நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். நேற்று துவங்கிய இந்த பயிற்சி இன்று மாலையுடன் நிறைபெற்றது. பயிற்சியின்போது பல்வேறு முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.