
எகிறிய ஜெயம் ரவியின் மார்க்கெட்
பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் நாயகனாக சிறப்பான நடிப்பை ஜெயம் ரவி வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படம் உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.
தனக்கு ஏற்ற ஸ்க்ரிப்டுகளை தேர்வு செய்து ஜெயம் ரவி நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் கல்யான் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் திரைப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு பிறகு ஜெயம் ரவியின் மார்க்கெட் தற்போது எகிறிவுள்ளது. அகிலன் படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளம் 30 கோடிக்கும் மேல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் ஜெயம்ரவி நடித்த ஆடை விளம்பரத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.