
சென்னை மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி (27) என்பவர் விஜய் மக்கள் இயக்கத்தில் தாம்பரம் 38ஆவது வார்டு செயலாளராக இருந்தார்.
இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரின் தாய் மது குடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார்.
இதனால் கருப்புசாமி சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. பின்பு அதே பகுதியில் உள்ள விநாயகா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சரவணன் என்பவரிடம் லாரி ஓட்டுனராக வேலை பார்த்துக் கொண்டு அங்கு உள்ள இடத்திலே தங்கி இருந்தார்.

இதற்கிடையில், அதிக மது போதையில் கருப்புசாமி அவர் தாய்க்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு செல்போனை துண்டித்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், கருப்புசாமி தங்கிருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தபோது புடவையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சென்ற தாம்பரம் போலீசார் அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in