டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அட்டவணை வெளியீடு.. !

சென்னை: டிஎன்பிஎஸ்சி உத்தேச தேர்வு அட்டவணையில் மாற்றம்  செய்துள்ளது. ஏற்கனவே வெளியான அறிவிப்பில்,  குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு இல்லாமல் இருந்த நிலையில், குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்ட 2023ம் ஆண்டுக்கான உத்ததேச தேர்வு அட்டவணையில், தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப்-1 பணியிடங்களை நிரப்பு வதற்கான,  தேர்வு தொடர்பான தகவல்கள், இல்லாமலிருந்து. இது இளைய சமுதாயத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளும் விமர்சித்து வந்தன.

இந்த நிலையில், இன்று குரூப்1 தேர்வு குறித்த அறிவிப்புகளுடன் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்நிலைத் தேர்வு 2023 நவம்பர் 23ம் தேதியும், முதன்மைத் தேர்வு 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 24ம் தேதி  நடைபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குரூப்-1 தேர்வு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எத்தனை பணியிடங்களுக்காக, தேர்வுகள் நடத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.