கொரோனா எச்சரிக்கை…விமானநிலையங்களில் பரிசோதனை…!

வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானின் துணை வைரஸ் பிஎப்.7 வேகமாக பரவி வருகிறது. அதிதீவிரமாக பரவுகிற இந்த வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நுழைந்துள்ளது.

இந்த பிஎப்.7 வைரஸ் அலை இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அந்த வகையில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகிற விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை (‘ரேண்டம்’) நடத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் சர்வதேச, இந்திய கொரோனா நிலைமை குறித்து டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.