திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் சுமார் 55 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கடந்த 2004 – 2007-ம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த போது, ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியதாகவும், அந்த பணத்தில் பிணாமி பெயரில் நிலங்களை வாங்கியதாகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோவையில் உள்ள 55 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த சொத்து, லஞ்சமாக பெற்ற பணத்தில் வாங்கப்பட்டது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.