சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்கும் விதமாக மத்திய சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா அறிகுறி அல்லது கொரோனா உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக பரிசோதனை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் புதிய கொரோனா அலை எழுந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.