மகாராஷ்டிரா மாநிலம் அகொலா மாவட்டம் காம்ஹிட் என்ற கிராமத்தில் பாபுலால் கஞ்கர் என்பவரின் மனைவி பல ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்தார். பாபுலாலும் சில ஆண்டுகளுக்கு முன் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பு வகித்தார்.
அதேபோல், பாபுலாலில் சகோதரன் சுரேஷும் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்று பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.
அதில், பாபுலானின் மனைவி தோல்வியடைந்தார். அதேபோல், சுரேஷும் தோல்வியடைந்தார். சுரேஷின் குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக காம்ஹிட் பஞ்சாயத்து தலைவர் பொறுப்பில் இருந்து வந்தனர். ஆனால், தற்போது நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தன் வீட்டில் இருந்த கூர்மையான வாளை எடுத்துக்கொண்டு காம்ஹிட் கிராமத்திற்கு சென்றார். தேர்தலில் வாக்களிக்காததால் ஆத்திரமடைந்த அவர் கிராம மக்களை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார்.
அவர் தெருக்களில் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
newstm.in