சாக்லெட் கொடுத்து 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!!

10 வயது சிறுமி சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் வாடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி வழக்கம்போல வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது, அந்த தம்பதியின் 10 வயது குழந்தை வீட்டின் அருகே உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றது.

அப்போது, அந்த கடை அருகே நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் சிறுமிக்கு சாக்லெட் கொடுத்துள்ளார். சாக்லெட்டை வாங்கியதும் அந்த சிறுமியை அவர் மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர், சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றனர். இதையடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.