பிறந்தநாள் என அழைத்து 16 வயது சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்..!!

மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஆண் நண்பர் ஒருவர் தனது பிறந்த நாள் விருந்துக்கு அழைத்துள்ளார். அந்த சிறுமியை பரேல் பகுதியில் உள்ள குடிசை வீட்டுக்கு அழைத்து சென்ற ஆண் நண்பர் அங்கிருந்த தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில், அந்த சிறுமியை ஆண் நண்பர் வலுக்கட்டாயமாக பாலியன் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், மனமுடைந்த சிறுமி கதறி அழுதும் விடாமல் மற்ற 5 பேரும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், சிறுமி கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை மீட்டுள்ளனர். அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் ஆறு பேரில் மூன்று பேர் 18 வயதுக்கு கீழே உடைய சிறுவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது . இதனால் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மற்ற மூன்று பேர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.