அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் காலமானார்..!

மலையாள திரையுலகில் பிரபலமான இயக்குநராக இருந்தவர் கே.பி.சஷி (64). இவர் உடல்நலக் குறைவின் காரணமாக திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் திடீரென கே.பி சஷி இன்று காலை மரணம் அடைந்துள்ளார்.

கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ‘இலையும் முள்ளும்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் கே.பி.சஷி. இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இவர் பாலிவுட் சினிமாவில் ‘ஏக் அலக் மௌசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும் புகழ்பெற்ற பல ஆவண படங்களையும் கே.பி. சஷி இயக்கியுள்ளார்.

இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.