நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 46-வது சர்வதேச புத்தக கண்காட்சி வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. இந்த புத்தக திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் இந்தாண்டு நடக்கும் புத்தக கண்காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். இந்தாண்டு திருநங்கைகளுக்கு ஓர் அரங்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாக அமைப்பு குழு தெரிவித்திருக்கிறது.
புத்தக விரும்பிகளின் திருவிழாவாக கருதப்படும் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என அனைத்து தரப்பினரையும் புத்தகக் கண்காட்சிக்கு ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சி 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.