தெருநாய்கள் கடித்ததில் ஒன்றரை வயது குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டம் மய்யநாடு பகுதியில் குழந்தைக்கு அவரது பாட்டி உணவு ஊட்டிக்கொண்டிருந்தார். உணவு கொடுத்தபிறகு பாட்டி பின்னர் வீட்டிற்குள் சென்றிருந்த போது, குழந்தை வீட்டின் முன்பு தனியாக விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென குழந்தை அலறும் சத்தம் கேட்டு, வீட்டின் முன்பு வந்து பார்த்தபோது, சுமார் 25 தெரு நாய்கள் குழந்தையை கடித்துக் கொண்டிருந்தன. இதையடுத்து குழந்தையின் பாட்டி நாய்களை துரத்தினார்.
படுகாயம் அடைந்த குழந்தையை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது குழந்தை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
சமீப காலமாக, கேரளாவில் பல இடங்களில் தெருநாய்களின் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளது. மேலும், இந்த ஆண்டு மட்டும் 20 பேர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
newstm.in